ETV Bharat / state

இருப்பிடச் சான்றிதழ் குளறுபடி: கலந்தாய்வில் கலந்துகொள்ள 14 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

author img

By

Published : Dec 4, 2020, 8:57 PM IST

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பங்கேற்க வந்த மாணவர்களில், இருப்பிடச் சான்றிதழ் குளறுபடி இருப்பதாக கூறி இதுவரை 14 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

medical study counselling  mbbs couselling
இருப்பிடச் சான்றிதழ் குளறுபடி: இதுவரை 14 கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுப்பு

சென்னை: மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பங்கேற்க வந்த மாணவர்களில் 14 பேரின் இருப்பிடச் சான்றிதழில் குளறுபடிகள் இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொது கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் வெளிமாநிலத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சான்றிதழில் சந்தேகம் இருப்பவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதுவரை, மருத்துவப் படிப்பில் பங்கேற்க வந்த 14 மாணவர்கள் இருப்பிட சான்றிதழ் பிரச்னையால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று(டிசம்பர் 4) நடைபெற்ற கலந்தாய்விற்கு 472 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கலந்தாய்வில் 453 மாணவர்கள் பங்கேற்றனர். 19 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

medical study counselling  mbbs couselling
மருத்துவ கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவர்கள்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 148 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 217 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 இடங்கள் என 384 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 67 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்புப் பட்டியலில் வைத்துள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 711 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 728 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் காலியாக உள்ளன.

மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு இன்று வந்த மாணவர்களில் 2 மாணவர்களின் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்ததால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்களில் இதுவரை இருப்பிடச் சான்றிதழ் சந்தேகம் என 14 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்வதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவக் கல்வி துணை இயக்குனர், சட்டம் சார்ந்த மருத்துவர்கள், வட்டாட்சியர் என ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சந்தேகப்படும் மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் ஆய்வு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7.5 % இட ஒதுக்கீடு - தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் எம்.பி.பி.எஸ் சீட்: தமிழ்நாடு அரசு அதிரடி

சென்னை: மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பங்கேற்க வந்த மாணவர்களில் 14 பேரின் இருப்பிடச் சான்றிதழில் குளறுபடிகள் இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொது கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் வெளிமாநிலத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சான்றிதழில் சந்தேகம் இருப்பவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதுவரை, மருத்துவப் படிப்பில் பங்கேற்க வந்த 14 மாணவர்கள் இருப்பிட சான்றிதழ் பிரச்னையால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று(டிசம்பர் 4) நடைபெற்ற கலந்தாய்விற்கு 472 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கலந்தாய்வில் 453 மாணவர்கள் பங்கேற்றனர். 19 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

medical study counselling  mbbs couselling
மருத்துவ கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவர்கள்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 148 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 217 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 இடங்கள் என 384 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 67 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்புப் பட்டியலில் வைத்துள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 711 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 728 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் காலியாக உள்ளன.

மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு இன்று வந்த மாணவர்களில் 2 மாணவர்களின் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்ததால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்களில் இதுவரை இருப்பிடச் சான்றிதழ் சந்தேகம் என 14 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்வதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவக் கல்வி துணை இயக்குனர், சட்டம் சார்ந்த மருத்துவர்கள், வட்டாட்சியர் என ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சந்தேகப்படும் மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் ஆய்வு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7.5 % இட ஒதுக்கீடு - தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் எம்.பி.பி.எஸ் சீட்: தமிழ்நாடு அரசு அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.