ETV Bharat / state

தமிழ்தான் மூத்த மொழி, இந்தி சின்ன மொழி- மதுரை எம்.பி. வெங்கடேசன் - தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு

சென்னை: நான் திண்ணயை பிடித்து நடந்தபோது என்னை பிடித்து நடந்த பையடா நீ என்று இந்தியை பார்த்து ஒவ்வொரு தமிழனும் உரக்கப் பேச வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

su.venkadesan
author img

By

Published : Nov 6, 2019, 11:10 AM IST

Updated : Nov 6, 2019, 11:50 AM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு' என்னும் தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரள இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்தான் மூத்த மொழி

அப்போது, மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பேசுகையில், "இந்திய துணைக் கண்டத்தில் மேலாதிக்கத்துக்கு எதிராக ஈராயிரம் ஆண்டுகளாக சமரசமற்ற சமமாக புரிந்துகொண்டிருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி.

இந்த ஈராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் சமஸ்கிருதத்தையும், வடமொழியையும்தான் ஆதரிக்கின்றனர். ஆட்சியாளர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆதரித்த போதும் வீழ்ந்துவிடாத எம் தமிழ் மொழி அமித் ஷாவுக்கா வீழ்ந்துவிடும் என்பதை முழங்குகிற ஒரு வரலாற்று மேடை இது.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் 90 விழுக்காடு இந்தியில் மட்டுமே நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் இருந்தன. நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒரு வார்த்தைகூட இந்தி அல்லாத மொழி பேசவில்லை. அந்த 38 நாள்கள் காதில் ஈயத்தை காச்சி ஊற்றியதை போல அடைத்த காதோடு காது ஜவ்வு வீங்கி வெளியே வருவதைப்போல இருந்தநிலையை நாம் பார்த்தோம்.

இந்தியாவின் சட்ட வரைவுகளை ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட பின்பு தான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை மாதமாக இந்தியில் முதலில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்தி சின்ன மொழி. இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிறகு முதன்முதலில் எழுதப்பட்டது தமிழ் மொழியில்தான்.

அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்துதான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. 'நான் திண்ணயை பிடித்து நடந்தபோது என்னை பிடித்து நடந்த பையடா நீ' என்று இந்தியை பார்த்து ஒவ்வொரு தமிழனும் உரக்கப் பேச வேண்டும். இந்தியில் எழுதுகின்ற குப்பையை போட என் வீடும் தமிழ்நாடும் குப்பை கிடங்கும் அல்ல என்பதை நிரூபிக்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும்" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு' என்னும் தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரள இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்தான் மூத்த மொழி

அப்போது, மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பேசுகையில், "இந்திய துணைக் கண்டத்தில் மேலாதிக்கத்துக்கு எதிராக ஈராயிரம் ஆண்டுகளாக சமரசமற்ற சமமாக புரிந்துகொண்டிருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி.

இந்த ஈராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் சமஸ்கிருதத்தையும், வடமொழியையும்தான் ஆதரிக்கின்றனர். ஆட்சியாளர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆதரித்த போதும் வீழ்ந்துவிடாத எம் தமிழ் மொழி அமித் ஷாவுக்கா வீழ்ந்துவிடும் என்பதை முழங்குகிற ஒரு வரலாற்று மேடை இது.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் 90 விழுக்காடு இந்தியில் மட்டுமே நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் இருந்தன. நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒரு வார்த்தைகூட இந்தி அல்லாத மொழி பேசவில்லை. அந்த 38 நாள்கள் காதில் ஈயத்தை காச்சி ஊற்றியதை போல அடைத்த காதோடு காது ஜவ்வு வீங்கி வெளியே வருவதைப்போல இருந்தநிலையை நாம் பார்த்தோம்.

இந்தியாவின் சட்ட வரைவுகளை ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட பின்பு தான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை மாதமாக இந்தியில் முதலில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்தி சின்ன மொழி. இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிறகு முதன்முதலில் எழுதப்பட்டது தமிழ் மொழியில்தான்.

அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்துதான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. 'நான் திண்ணயை பிடித்து நடந்தபோது என்னை பிடித்து நடந்த பையடா நீ' என்று இந்தியை பார்த்து ஒவ்வொரு தமிழனும் உரக்கப் பேச வேண்டும். இந்தியில் எழுதுகின்ற குப்பையை போட என் வீடும் தமிழ்நாடும் குப்பை கிடங்கும் அல்ல என்பதை நிரூபிக்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும்" என்றார்.

Intro:Body:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கிற தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்த இந்த மாநாட்டில் கேரள மாநில இடது ஜனநாயக முன்னணிண்ணின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தீர்மானங்களை முன்மொழிந்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்திய துணை கண்டத்தில் ஒரு மொழி மேலாதிக்கத்துக்கு எதிராக ஈராயிரம் ஆண்டுகளாக சமரசமற்ற சம புரிந்துகொண்டிருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. அந்த வரலாற்றின் தொடர்ச்சியினுடைய மேடை இது.

இந்த ஈராயிரம் ஆண்டுகள் ஆட்சி செச்ச்தவர்கள் சமஸ்கிருக்கையும் வடமொழியையும் தான் ஆதரிக்கின்றனர். ஆட்சியாளர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆதரித்த போதும் வீழ்ந்துவிடாத எம் தமிழ் மொழி அமித் ஷாவுக்கா வீழ்ந்துவிடும் என்பதை முழங்குகிற ஒரு வரலாற்று மேடை இது.

1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆட்சி மொழி இந்தியா ஆங்கிலமா என்று வந்தபோது இந்திய துணை கண்டத்தில் வேறெந்த மாகாணத்திலும் இல்லாத அளவுக்கு எங்கள் உறுப்பினர்கள் அவர்களின் தாய்மொழியில் தான் பேசுவார்கள் என்று கன்னடத்தில், தெலுங்கில், தமிழ், மலையாளத்தில் பேசியவர்கள் கம்யூனிஜ்ட் கட்சியை சார்ந்தவர்கள் தான். அந்த வகையில் இது வரலாற்று சிறப்பு மிக்க மேடை வரலாற்று தொடர்ச்சியுள்ள மேடை.

1968 இல் நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி திருத்த சட்டம் கொண்டுவந்த போது அதன்மீதான விவதாத்தை திராவிட முன்னேற்ற கழகம் தலமையிலான ஆட்சி நடத்தியபோது மும்மொழி கொள்கை இல்லை இரு மொழி கொள்கைதான் என்று அண்ணா அவர்கள் கொண்டுவந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தில் இருமொழி கொள்கை சரி ஆனால் ஆங்கிலத்தை கட்டாயமாக்காதீர்கள் எங்கள் தாய்மொழியான தமிழை கட்டாயமாக்குங்கள் என்று முழங்கிய எங்கள் தலைவர் தமிழகத்தின் அப்பழுக்கில்லாத அரசியல் சிங்கம் சங்கரைய்யா அவர்ககளால் கட்டமமைக்கப்பட்ட இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க மேடை இது.

இவ்வளவு பெரிய வரலாற்றுக்கு சொந்தமான தமிழர் நிலத்தில் தாய் மொழியான தமிழுக்கு மற்றவர்களைவிட கம்யூனிஸ்ட்டுகள் ஒரு படி அதிகமாக உரிமை கோர முடியும்.

நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத் தொடரில் 90 சதவிகிதம் இந்தியில் மட்டுமே நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் இருந்தன. நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒரு வார்த்தை கூட இந்தி அல்லாத மொழி பேசவில்லை. 38 நாள்கள் காதில் ஈயத்தை காச்சி ஊற்றியதை போல அடைத்த காதோடு காது ஜவ்வு வீங்கி வெளியே வருவதைப்போல இருந்தநிலையை நாம் பார்த்தோம்.

அதுமட்டுமல்ல இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை அல்லது சட்ட வரைவுகளை ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்டு பின்பு தான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக இந்தியில் முதலில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்தி சின்ன மொழி. இந்திய அரசியல் சாசன சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிறகு முதன்முதலில் எழுதப்பட்டது தமிழ் மொழியில்தான். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்துதான் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டது. நான் திண்ணயை பிடித்து நடந்தபோது என்னை பிடித்து நடந்த பையடா நீ என்று இந்தியை பார்த்து ஒவ்வொரு தமிழனும் உரக்கப்பேச வேண்டும்.

இந்த மூன்று மாதங்கள் அனைத்திலும் மாற்றம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருகின்ற கடிதம் இந்தியில் வந்துகொண்டிருந்தது. கடந்த ஒரு மாத காலமாக அடுத்தக்கட்ட வளர்ச்சியாக கடிதம் மட்டுமல்ல அதன்மேல் கவரிலுள்ள பெறுநர் விலாசமும் இந்தியில் வருகிறது. போன வாரம் என் வீட்டுக்கு வந்து தபால்காரர் அந்த தபாலை கொடுத்தார். என்னங்க இந்தியில் எழுதியிருக்கு. உனக்கு இந்தி தெரியுமா என்று கேட்டேன். அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தெரியாது கென்று சொன்னார். அப்போ ஏன் என் வீட்டில் கொண்டுவந்து போட்டீங்க என்றதற்கு சார் இந்த ஏரியாவுக்கு இந்தியில் எது வந்தாலும் உங்ககிட்டதான் சார் கொண்டுந்து போடுவேன்னு சொன்னார்.

நீ இந்தியில் எழுதுகின்ற குப்பையை போட என் வீடும் தமிழ்நாடும் குப்பை கிடங்கு அல்ல என்பதை நிரூபிக்கும் மாநாடாக இந்தி மாநாடு இருக்கும்" என்று தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Nov 6, 2019, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.