ETV Bharat / state

தமிழ்நாட்டில் 23,310 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : May 5, 2021, 9:42 PM IST

தமிழ்நாட்டில் இன்று(மே.5) 23,310 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று
Corona infection

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதிதாக 23 ஆயிரத்து 310 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 65 ஆயிரத்து 21 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 29 ஆயிரத்து 640 படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையின் 11,894 படுக்கைகளில் 3,899 படுக்கைகள் காலியாக உள்ளது.

அதேபோல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்களில் 46 ஆயிரத்து 543 படுக்கைகள் உள்ளன. அதில் 30 ஆயிரத்து 22 படுக்கைகள் காலியாக இருக்கிறது. சென்னையில் 7 ஆயிரத்து 364 கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமைப்படுத்தும் மையங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 4,033 படுக்கைகள் காலியாக உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை மே மாதம் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 695 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 23 ஆயிரத்து 286 நபர்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 24 நபர்களுக்கும் என 23 ஆயிரத்து 310 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 687 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 லட்சத்து 72 ஆயிரத்து 602 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 20 ஆயிரத்து 62 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 29 ஆயிரத்து 512 என உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 73 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 94 நோயாளிகளும் என மேலும் 167 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 779 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை: 3,64,081

செங்கல்பட்டு: 88,192

கோயம்புத்தூர்: 86,261

திருவள்ளூர்: 65,110

சேலம்: 44,427

காஞ்சிபுரம்: 40,805

கடலூர்: 31,831

மதுரை: 34,631

வேலூர்: 29,109

தஞ்சாவூர்: 27,393

திருவண்ணாமலை: 24,851

திருப்பூர்: 28,861

கன்னியாகுமரி: 23,662

திருச்சிராப்பள்ளி: 26,156

தூத்துக்குடி: 26,544

திருநெல்வேலி: 27,806

தேனி: 21,776

விருதுநகர்: 21,243

ராணிப்பேட்டை: 22666

விழுப்புரம்: 20,688

ஈரோடு: 24,016

நாமக்கல் : 17,609

திருவாரூர்: 16,145

திண்டுக்கல்: 16,930

புதுக்கோட்டை: 14,392

கள்ளக்குறிச்சி: 13,172

நாகப்பட்டினம்: 14,844

தென்காசி: 12,740

நீலகிரி: 10,358

கிருஷ்ணகிரி: 16,525

திருப்பத்தூர்: 10,716

சிவகங்கை: 9,201

தருமபுரி: 10,478

ராமநாதபுரம் : 9,353

கரூர்: 8,737

அரியலூர்: 5,894

பெரம்பலூர்: 2,894

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,003

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,074

ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: கரோனா தடுப்பு விதி மீறல்: இரண்டாவது முறையாக ஃபைன் கட்டிய ஜிஆர்டி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதிதாக 23 ஆயிரத்து 310 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 65 ஆயிரத்து 21 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 29 ஆயிரத்து 640 படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையின் 11,894 படுக்கைகளில் 3,899 படுக்கைகள் காலியாக உள்ளது.

அதேபோல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்களில் 46 ஆயிரத்து 543 படுக்கைகள் உள்ளன. அதில் 30 ஆயிரத்து 22 படுக்கைகள் காலியாக இருக்கிறது. சென்னையில் 7 ஆயிரத்து 364 கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமைப்படுத்தும் மையங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 4,033 படுக்கைகள் காலியாக உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை மே மாதம் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 695 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 23 ஆயிரத்து 286 நபர்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 24 நபர்களுக்கும் என 23 ஆயிரத்து 310 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 687 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 லட்சத்து 72 ஆயிரத்து 602 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 20 ஆயிரத்து 62 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 29 ஆயிரத்து 512 என உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 73 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 94 நோயாளிகளும் என மேலும் 167 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 779 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை: 3,64,081

செங்கல்பட்டு: 88,192

கோயம்புத்தூர்: 86,261

திருவள்ளூர்: 65,110

சேலம்: 44,427

காஞ்சிபுரம்: 40,805

கடலூர்: 31,831

மதுரை: 34,631

வேலூர்: 29,109

தஞ்சாவூர்: 27,393

திருவண்ணாமலை: 24,851

திருப்பூர்: 28,861

கன்னியாகுமரி: 23,662

திருச்சிராப்பள்ளி: 26,156

தூத்துக்குடி: 26,544

திருநெல்வேலி: 27,806

தேனி: 21,776

விருதுநகர்: 21,243

ராணிப்பேட்டை: 22666

விழுப்புரம்: 20,688

ஈரோடு: 24,016

நாமக்கல் : 17,609

திருவாரூர்: 16,145

திண்டுக்கல்: 16,930

புதுக்கோட்டை: 14,392

கள்ளக்குறிச்சி: 13,172

நாகப்பட்டினம்: 14,844

தென்காசி: 12,740

நீலகிரி: 10,358

கிருஷ்ணகிரி: 16,525

திருப்பத்தூர்: 10,716

சிவகங்கை: 9,201

தருமபுரி: 10,478

ராமநாதபுரம் : 9,353

கரூர்: 8,737

அரியலூர்: 5,894

பெரம்பலூர்: 2,894

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,003

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,074

ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: கரோனா தடுப்பு விதி மீறல்: இரண்டாவது முறையாக ஃபைன் கட்டிய ஜிஆர்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.