ETV Bharat / state

காவலர்களால் தாக்கப்பட்ட நடத்துனருக்கு இழப்பீடு - etv bharat

டிக்கெட் எடுக்க கூறியதற்காக காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடத்துனருக்கு இழப்பீடு
நடத்துனருக்கு இழப்பீடு
author img

By

Published : Aug 3, 2021, 5:43 PM IST

சென்னை: குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்த போது, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் ஏறியுள்ளனர்.

நடத்துனர் மீது தாக்குதல்

அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறிய நடத்துனர் ரமேஷை, காவலர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நடத்துனர் ரமேஷ் காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவின.

வழக்கு விசாரணை

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயசந்திரன், பாதிக்கப்பட்ட நடத்துனர் ரமேஷுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை

மேலும் இரு காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட அவசியமில்லை எனவும் உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்த போது, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் ஏறியுள்ளனர்.

நடத்துனர் மீது தாக்குதல்

அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறிய நடத்துனர் ரமேஷை, காவலர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நடத்துனர் ரமேஷ் காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவின.

வழக்கு விசாரணை

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயசந்திரன், பாதிக்கப்பட்ட நடத்துனர் ரமேஷுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை

மேலும் இரு காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட அவசியமில்லை எனவும் உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.