ETV Bharat / state

காவலர்கள் ஒய்வு இல்லம் திறப்பு

சென்னை: பொது மக்கள் தங்களது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார்.

author img

By

Published : May 30, 2019, 3:35 PM IST

file pic

சென்னை மண்ணடியில் உள்ள ஜாபர் சாதிக் தெருவில் அமைந்துள்ள காவலர்கள் தங்கும் ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அலுவல் பணிக்காக வரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் ஓய்வெடுக்கும் இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வு இல்லம் 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. நவீனப்படுத்தி தற்போது இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 12 அறைகள் உள்ளன. இதில் 30 காவலர்களும்,24 காவல்துறை அதிகாரிகளும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள காவலர்கள் ஓய்வு இல்லத்தையும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் 1.56 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை நடைபெற்ற வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வோடு அனைத்து வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சென்னை மண்ணடியில் உள்ள ஜாபர் சாதிக் தெருவில் அமைந்துள்ள காவலர்கள் தங்கும் ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அலுவல் பணிக்காக வரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் ஓய்வெடுக்கும் இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வு இல்லம் 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. நவீனப்படுத்தி தற்போது இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 12 அறைகள் உள்ளன. இதில் 30 காவலர்களும்,24 காவல்துறை அதிகாரிகளும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள காவலர்கள் ஓய்வு இல்லத்தையும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் 1.56 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை நடைபெற்ற வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வோடு அனைத்து வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சென்னையில் காவலர்களுக்கு ஓய்வு இல்லம் திறக்கும் விழா நடைப்பெற்றது.

சென்னை மண்ணடியில் உள்ள ஜாபர்சாதிக் தெருவில் அமைந்துள்ள காவலர்கள் தங்கும் ஓய்வு இல்லம் தற்போது புதுபிக்கப்பட்டு காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

வடமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அலுவல் பணிக்காக வரும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஓய்வு அளிக்க இல்லம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஓய்வு இல்லம் 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன எனவும் இதனை நவீன படுத்தி தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதில் 12 அறைகள் உள்ளன இதில் 30 காவலர்களும்,24 காவல்துறை அதிகாரிகளும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் இதன் விலை 50,100 என மிக குறைந்த அளவில் செயல்பட்டு வருகின்றன எனவும் இதனால் பல்வேறு காவலர்கள் பயன்படுகின்றன என தெரிவித்தார்.பின்பு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள காவலர்கள் ஓய்வு இல்லத்தையும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில்  1.56 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தீவிரமான விசாரணை நடைப்பெற்று வருகிறது எனவும் கொள்ளை நடைப்பெற்ற வீட்டில் சிசிடிவி கேமராக்கள்  இல்லாதது பெரும் சிரமமாக உள்ளதாகவும், மேலும் இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்படுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வோடு எல்லா வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.