ETV Bharat / state

குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களின் வாடகை பாக்கி எவ்வளவு? - உயர்நீதிமன்றம்

author img

By

Published : Nov 1, 2021, 9:09 PM IST

குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களின் வாடகை பாக்கி எவ்வளவு என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை: சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிப்பு, திருவெள்ளறை கோவில் பணிகளை மூன்றாம் நபர்களுக்கு டெண்டர் விட்டது, சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரங்கராஜன் நரசிம்மன், வெங்கட்ராமன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று(நவ.1) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆஜராகி, குத்தகை சொத்துகள் மூலம் வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக உள்ள பாக்கித் தொகையை மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அறநிலையத்துறை ஆணையரிடம் கோவில்களை நேரில் சென்று ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்யும் படியும், மேற்கொண்ட பணிகள் குறித்து புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களின் வாடகை பாக்கி எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: முதல் நாள் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர்!

சென்னை: சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிப்பு, திருவெள்ளறை கோவில் பணிகளை மூன்றாம் நபர்களுக்கு டெண்டர் விட்டது, சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரங்கராஜன் நரசிம்மன், வெங்கட்ராமன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று(நவ.1) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆஜராகி, குத்தகை சொத்துகள் மூலம் வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக உள்ள பாக்கித் தொகையை மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அறநிலையத்துறை ஆணையரிடம் கோவில்களை நேரில் சென்று ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்யும் படியும், மேற்கொண்ட பணிகள் குறித்து புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களின் வாடகை பாக்கி எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: முதல் நாள் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.