ETV Bharat / state

இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிட முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

author img

By

Published : May 7, 2023, 7:40 AM IST

ஆண், பெண், கிராமம், நகரம், குழந்தை, பெரியவர் என அனைத்து தரப்பு மக்களையும் கைதூக்கி விடுகிற அரசாகக் கடந்த இரண்டாண்டு கால ஆட்சி விளங்கி இருக்கிறது என திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Chief Minister M K Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியில் திமுகவின் 2 ஆண்டு சாதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அந்த குழந்தைகளுடைய ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டப்படி சத்தான உணவை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசு பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால், அவர்களுக்குக் காலை சிற்றுண்டியை நம் அரசு வழங்குகிறது.

உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் செல்லுகின்ற ஒரு மாணவி இருந்தால், புதுமைப்பெண் திட்டம் மூலமாக அவர்களுக்கு மாதா மாதம் ரூ.1000 நமது அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் இருக்கின்ற எல்லா பெண்களுக்கும் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிற வசதியை நம் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. உங்கள் வீட்டில் கல்லூரிக்குப் போகிற மாணவர் இருந்தால், அவரை எல்லா விதத்திலும் வேலைவாய்ப்புக்குத் தகுதிப்படுத்த, 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக நம் அரசு பயிற்சி தருகிறது.

மேலும், விவசாயி இருந்தால், அவருக்கு நம் அரசு இலவச மின் இணைப்பு கொடுக்கிறது. மகளிருக்கு சுய உதவிக் குழுக்களின் மூலமாக அதிக கடனுதவியை நம் அரசுதான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. திருநங்கையர் - மாற்றுத்திறனாளிகள் - கோயில் பூசாரிகள் - மீனவர்கள் - தொழிலாளர்கள் என அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி கைதூக்கி விடுகிறது நம் அரசு.

அரசு ஊழியர்களின் நலன் காத்து அவர்களைப் பாதுகாத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறது நம் அரசு. புதிய தொழில் முதலீடுகள் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவது நம்முடைய அரசு. ஆண் - பெண், கிராமம் - நகரம், குழந்தைகள் - முதியோர் என எல்லா வகையிலும், எல்லாருக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது நமது அரசு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் பேரறிஞர் அண்ணா. மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி.

மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள். கைம்பெண் உதவித்தொகை கேட்டுக் கடந்த ஆட்சியில் விண்ணப்பித்து அவருக்கு அது கிடைக்கவில்லை. நம்முடைய ஆட்சி வந்ததும், மாதந்தோறும் ரூ.1000 அவருக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சிதான், என்னுடைய மகிழ்ச்சி.

தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுவன். அந்த கருவியை வாங்குவதற்கு அவர்களிடம் பணமில்லை. அந்தச் சிறுவனுக்கு நானே என் கையால், காதொலிக் கருவியைப் பொருத்திவிட்டேன். அருகில் இருந்து வரக்கூடிய சத்தங்களையெல்லாம் கேட்டு சஜீத் சிரித்தார், அந்த அழகைப் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருக்கு இப்போது 9 வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். முகச்சிதைவு நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை, கூட படிக்கிற சில மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று செய்தி கிடைத்தது.

உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தோம். இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வருகிறார். அவர்களுடைய வீட்டிற்கே நேரில் சென்று அந்த சிறுமியின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகையைப் பார்த்து, வாழ்த்தி விட்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மெரினா கடலில் கால் நனைக்கும் போது மாற்றுத்திறனாளி பவானி கணேஷ் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. விளிம்பு நிலை மக்களாக இருக்கிற இருளர் – நரிக்குறவர் மக்களுக்கும் என்ன தேவை என்று கவனித்து எல்லா மாவட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களுடைய சுயமரியாதையையும் மாண்பையும் நிலைநாட்டியிருக்கிறோம்.

அவர்களுடைய வீட்டிற்கே சென்று நான் காலை உணவு சாப்பிட்டேன். சாப்பிட்டபோது அந்த உணவு காரமாக இருந்தது. ஆனால் அதைவிட அன்பு அதிகமாக இருந்தது, அந்த அன்புதான் இன்றைக்கு நம் அரசு இந்த பெயரை, இந்தச் சிறப்பை பெற்றிருக்கிறது. மக்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வர வைக்க முடியாது. இதயம் மகிழ்ந்தால்தான் இயற்கையாக முகமும் மலரும்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அதை, நான் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறபோது கவனிக்கிறேன்.

மாவட்டந்தோறும் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் மூலமாக,
* வீட்டுமனைப்பட்டா
* கல்விக் கடனுதவி
* சுயதொழில் தொடங்க கடனுதவி
* கூட்டுறவுக் கடன்கள்
* நகைக் கடன்கள்
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள்
* உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு
* பயிர்க்கடன்கள்
* புதிய ஓய்வூதிய ஆணைகள்
* மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள்
* உழவர்களுக்கு மரக்கன்றுகள்
* வேளாண் பொருள் தொகுப்புகள்
* கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைகள்
* சாலைகள்
* மேம்பாலங்கள்
* குடியிருப்புகள்
* சத்துணவு மையங்கள்
* சமூக நலக் கூடங்கள்

என்று எத்தனையோ திட்டங்களை மாவட்டந்தோறும் - நகரங்கள் தோறும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம்.
மேலும் துறைகள்தோறும் சாதனைகளைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம். சென்ற ஆட்சியில் சீரழிந்து கிடந்த அரசு, அந்த அரசினுடைய நிர்வாகம், அதை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் எடுத்து வருகிறோம். தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350-க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வுக் கூட்டங்கள் நடந்து பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்று இதுநாள் வரை 6905 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். அதோடு நிற்கவில்லை. கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இதுவரை 4 கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருக்கிறேன். இப்படி இரண்டாண்டு சாதனைகளை முழுவதுமாக சொல்லி முடிக்க வேண்டுமென்றால், இன்னும் 2 நாட்கள் நீங்கள் இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்றார்.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால் நமது திராவிட மாடல் அரசு, சொல்லாததையும் செய்வோம் - சொல்லாமலும் செய்வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சராக நான் பொறுப்பேற்றபோது கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற தமிழ்நாட்டினுடைய பொருளாதார நிலைமை என்ன? அரசாங்க கஜானாவினுடைய நிலைமை என்ன? அதையெல்லாம் மாற்றி, இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை உண்டாக்கியிருக்கிறோம். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டினுடைய உரிமைகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம்.

வளமான தமிழ்நாட்டை - இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை - எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழ்நாட்டை உருவாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்கிறது. உங்களுடைய மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் நம்முடைய இலக்கை நோக்கி என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற உழைப்பேன்.

உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் ஐந்தாண்டுகளும் உங்களின் நலனுக்காக இருக்கும். அதன்பிறகும், உங்கள் ஆதரவோடு தொடரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Karnataka Election : கர்நாடகாவில் பாஜக போட்டியிடவில்லை.. மக்கள் போட்டியிடுகிறார்கள்! - பிரதமர் மோடி!

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியில் திமுகவின் 2 ஆண்டு சாதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அந்த குழந்தைகளுடைய ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டப்படி சத்தான உணவை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசு பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால், அவர்களுக்குக் காலை சிற்றுண்டியை நம் அரசு வழங்குகிறது.

உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் செல்லுகின்ற ஒரு மாணவி இருந்தால், புதுமைப்பெண் திட்டம் மூலமாக அவர்களுக்கு மாதா மாதம் ரூ.1000 நமது அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் இருக்கின்ற எல்லா பெண்களுக்கும் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிற வசதியை நம் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. உங்கள் வீட்டில் கல்லூரிக்குப் போகிற மாணவர் இருந்தால், அவரை எல்லா விதத்திலும் வேலைவாய்ப்புக்குத் தகுதிப்படுத்த, 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக நம் அரசு பயிற்சி தருகிறது.

மேலும், விவசாயி இருந்தால், அவருக்கு நம் அரசு இலவச மின் இணைப்பு கொடுக்கிறது. மகளிருக்கு சுய உதவிக் குழுக்களின் மூலமாக அதிக கடனுதவியை நம் அரசுதான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. திருநங்கையர் - மாற்றுத்திறனாளிகள் - கோயில் பூசாரிகள் - மீனவர்கள் - தொழிலாளர்கள் என அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி கைதூக்கி விடுகிறது நம் அரசு.

அரசு ஊழியர்களின் நலன் காத்து அவர்களைப் பாதுகாத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறது நம் அரசு. புதிய தொழில் முதலீடுகள் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவது நம்முடைய அரசு. ஆண் - பெண், கிராமம் - நகரம், குழந்தைகள் - முதியோர் என எல்லா வகையிலும், எல்லாருக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது நமது அரசு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் பேரறிஞர் அண்ணா. மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி.

மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள். கைம்பெண் உதவித்தொகை கேட்டுக் கடந்த ஆட்சியில் விண்ணப்பித்து அவருக்கு அது கிடைக்கவில்லை. நம்முடைய ஆட்சி வந்ததும், மாதந்தோறும் ரூ.1000 அவருக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சிதான், என்னுடைய மகிழ்ச்சி.

தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுவன். அந்த கருவியை வாங்குவதற்கு அவர்களிடம் பணமில்லை. அந்தச் சிறுவனுக்கு நானே என் கையால், காதொலிக் கருவியைப் பொருத்திவிட்டேன். அருகில் இருந்து வரக்கூடிய சத்தங்களையெல்லாம் கேட்டு சஜீத் சிரித்தார், அந்த அழகைப் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருக்கு இப்போது 9 வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். முகச்சிதைவு நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை, கூட படிக்கிற சில மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று செய்தி கிடைத்தது.

உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தோம். இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வருகிறார். அவர்களுடைய வீட்டிற்கே நேரில் சென்று அந்த சிறுமியின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகையைப் பார்த்து, வாழ்த்தி விட்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மெரினா கடலில் கால் நனைக்கும் போது மாற்றுத்திறனாளி பவானி கணேஷ் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. விளிம்பு நிலை மக்களாக இருக்கிற இருளர் – நரிக்குறவர் மக்களுக்கும் என்ன தேவை என்று கவனித்து எல்லா மாவட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களுடைய சுயமரியாதையையும் மாண்பையும் நிலைநாட்டியிருக்கிறோம்.

அவர்களுடைய வீட்டிற்கே சென்று நான் காலை உணவு சாப்பிட்டேன். சாப்பிட்டபோது அந்த உணவு காரமாக இருந்தது. ஆனால் அதைவிட அன்பு அதிகமாக இருந்தது, அந்த அன்புதான் இன்றைக்கு நம் அரசு இந்த பெயரை, இந்தச் சிறப்பை பெற்றிருக்கிறது. மக்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வர வைக்க முடியாது. இதயம் மகிழ்ந்தால்தான் இயற்கையாக முகமும் மலரும்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அதை, நான் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறபோது கவனிக்கிறேன்.

மாவட்டந்தோறும் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் மூலமாக,
* வீட்டுமனைப்பட்டா
* கல்விக் கடனுதவி
* சுயதொழில் தொடங்க கடனுதவி
* கூட்டுறவுக் கடன்கள்
* நகைக் கடன்கள்
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள்
* உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு
* பயிர்க்கடன்கள்
* புதிய ஓய்வூதிய ஆணைகள்
* மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள்
* உழவர்களுக்கு மரக்கன்றுகள்
* வேளாண் பொருள் தொகுப்புகள்
* கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைகள்
* சாலைகள்
* மேம்பாலங்கள்
* குடியிருப்புகள்
* சத்துணவு மையங்கள்
* சமூக நலக் கூடங்கள்

என்று எத்தனையோ திட்டங்களை மாவட்டந்தோறும் - நகரங்கள் தோறும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம்.
மேலும் துறைகள்தோறும் சாதனைகளைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம். சென்ற ஆட்சியில் சீரழிந்து கிடந்த அரசு, அந்த அரசினுடைய நிர்வாகம், அதை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் எடுத்து வருகிறோம். தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350-க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வுக் கூட்டங்கள் நடந்து பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்று இதுநாள் வரை 6905 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். அதோடு நிற்கவில்லை. கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இதுவரை 4 கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருக்கிறேன். இப்படி இரண்டாண்டு சாதனைகளை முழுவதுமாக சொல்லி முடிக்க வேண்டுமென்றால், இன்னும் 2 நாட்கள் நீங்கள் இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்றார்.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால் நமது திராவிட மாடல் அரசு, சொல்லாததையும் செய்வோம் - சொல்லாமலும் செய்வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சராக நான் பொறுப்பேற்றபோது கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற தமிழ்நாட்டினுடைய பொருளாதார நிலைமை என்ன? அரசாங்க கஜானாவினுடைய நிலைமை என்ன? அதையெல்லாம் மாற்றி, இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை உண்டாக்கியிருக்கிறோம். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டினுடைய உரிமைகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம்.

வளமான தமிழ்நாட்டை - இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை - எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழ்நாட்டை உருவாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்கிறது. உங்களுடைய மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் நம்முடைய இலக்கை நோக்கி என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற உழைப்பேன்.

உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் ஐந்தாண்டுகளும் உங்களின் நலனுக்காக இருக்கும். அதன்பிறகும், உங்கள் ஆதரவோடு தொடரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Karnataka Election : கர்நாடகாவில் பாஜக போட்டியிடவில்லை.. மக்கள் போட்டியிடுகிறார்கள்! - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.