ETV Bharat / state

காரின் உரிமையாளரே அவரது காரை திடுடிய சம்பவம்...! ஏன் தெரியுமா? - recent car theft news chennai

சென்னை: வாகன சோதனையில் போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்த காரை, அதன் உரிமையாளர் மாற்று சாவிபோட்டு எடுத்துச்சென்றுள்ளார்.

car theft
author img

By

Published : Oct 6, 2019, 9:24 AM IST

Updated : Oct 6, 2019, 1:31 PM IST

சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் இசைக் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வன் நேற்று இரவு 11மணி அளவில் தனது காரில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வடபழனி காவல் நிலையம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் மயில்சாமி தலைமையிலான காவல்துறையினர், குடிபோதையில் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அன்புச்செல்வன் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்து அபராதம் விதித்து, அதற்கான ரசீதை அவரிடம் காவலர்கள் வழங்கினர்.

மேலும், காரின் ஒரிஜினல் ஆர்.சி புத்தகம், லைசென்ஸ் ஆகியவற்றை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு அன்புச்செல்வனிடம் காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்து சென்ற அன்புச்செல்வன் சிறிது நேரம் கழித்து, வேறு ஒரு மாற்று சாவியை போட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார்.


காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்த காரை மாற்று சாவி போட்டு அதன் உரிமையாளர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வடபழனி சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர், அன்புச்செல்வனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த மாருதி 800!

சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் இசைக் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வன் நேற்று இரவு 11மணி அளவில் தனது காரில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வடபழனி காவல் நிலையம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் மயில்சாமி தலைமையிலான காவல்துறையினர், குடிபோதையில் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அன்புச்செல்வன் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்து அபராதம் விதித்து, அதற்கான ரசீதை அவரிடம் காவலர்கள் வழங்கினர்.

மேலும், காரின் ஒரிஜினல் ஆர்.சி புத்தகம், லைசென்ஸ் ஆகியவற்றை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு அன்புச்செல்வனிடம் காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்து சென்ற அன்புச்செல்வன் சிறிது நேரம் கழித்து, வேறு ஒரு மாற்று சாவியை போட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார்.


காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்த காரை மாற்று சாவி போட்டு அதன் உரிமையாளர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வடபழனி சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர், அன்புச்செல்வனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த மாருதி 800!

Intro:Body:போலிசார் பறிமுதல் செய்த காரை மாற்று சாவி போட்டு எடுத்து சென்ற நபரால் பரபரப்பு.


விருகம்பாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் இசை கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வன் நேற்று இரவு11மணி அளவில் தனது காரில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார் வடபழனி போலிஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலிஸ்  இன்ஸ்பெக்டர் மயில்சாமி தலைமையில் போலிசார் குடிபோதையில் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர் அப்போது அன்புச்செல்வன் காரை போலிசார் மடக்கினர் அன்புச்செல்வன் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது உடனடியாக காரை பறிமுதல் செய்த போலீசார் அபராதம் விதித்து அதற்கான ரசீதை அன்புச்செல்வனிடம் கொடுத்தனர் மேலும் காரின் ஒரிஜினல் ஆர்.சி புத்தகம், லைசென்ஸ் கொண்டு வந்து கொடுத்து விட்டு வேறு ஒரு டிரைவர் மூலம் காரை எடுத்து செல்லுமாறு கூறினர் அங்கிருந்து கிளம்பி சென்ற அன்புச்செல்வன் சிறிது நேரம் கழித்து வந்து வேறு ஒரு சாவியை போட்டு காரை நைசாக எடுத்து சென்றார். போலிஸ் நிலையம் முன்பு  போலிசார் பறிமுதல் செய்த காரை மாற்று சாவி போட்டு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து  போக்குவரத்து போலிசார் புகாரின் பேரில் வடபழனி சட்டம் ஒழுங்கு  போலிசார் விசாரணை நடத்தி அன்புச்செல்வனை தேடி  வருகின்றனர்Conclusion:
Last Updated : Oct 6, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.