ETV Bharat / state

அத்திவரதரை வைக்கும் குளத்தை ஏன் முறையாக பராமரிக்கவில்லை - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: குளத்தை சுத்தம் செய்யும் வரை அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள பகுதியில் மட்டும் தண்ணீரை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Aug 16, 2019, 9:32 PM IST

chennai high court

சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக, வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்நிலையில், அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் தொல்லியல்துறை ஏன் பதிலளிக்கவில்லை. தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும். அத்திவரதரை குளத்தில் இறக்கி வைத்தவுடன் அந்த அறையில் மட்டும் சுத்தமான தண்ணீரை நிரப்பலாம் என உத்தரவிட்டு இவ்வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக, வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்நிலையில், அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் தொல்லியல்துறை ஏன் பதிலளிக்கவில்லை. தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும். அத்திவரதரை குளத்தில் இறக்கி வைத்தவுடன் அந்த அறையில் மட்டும் சுத்தமான தண்ணீரை நிரப்பலாம் என உத்தரவிட்டு இவ்வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Intro:Body:குளத்தை சுத்தம் செய்யும் வரை
அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள பகுதியில் மட்டும் தண்ணீரை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த அசோகன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை 48 நாள் பக்தர்கள் தரிசனத்திக்காக, வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் தொல்லியல் துறை பதிலளிக்கவில்லை.

தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும். பொற்றாமரை குளத்தின் தண்ணீரை உபயோகிக்காமல் தண்ணீரை நிரப்ப வேண்டும் என தெரிவித்த நீதிபதி, சுத்தம் செய்யும் பணியில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மத்திய அரசில் சார்பில் 50 முதல் 75 சி.ஐ.எஸ்.எப் வீரர்களை அனுப்ப தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், குளத்தை நிரப்ப தேவையான 25 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீரை 2000 லாரிகளில் கொண்டு வர வேண்டும். பொற்றாமரை குளத்தின் உள்ள நீர் குடிக்க தகுதியானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரையும் விடலாம். போர் வாட்டர் மூலமாகவும் நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அறநிலையத்துறை சார்பில், இன்று காலையில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சுத்தம் செய்யும் பணி முடிவடையும்.

நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று இரவு 8 மணியளவில் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மீண்டும் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சிலை வைக்கப்பட உள்ள இடத்தை சுற்றி தண்ணீர் நிரப்பி விட்டு, தூர்வாரப்பட்ட பின்னர் குளம் முழுவதும் நீர் நிரம்பலாம் என தெரிவித்த நீதிபதி
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.