ETV Bharat / state

பணியிலிருந்த ஏா் இந்தியா ஊழியர் உயிரிழப்பு! - ஏா் இந்தியா ஊழியா்

சென்னை: விமானநிலையத்தின் ஓடுபாதை அருகே விமானங்கள் நிறுத்தும் இடத்தில் பணியிலிருந்த ஏா் இந்தியா ஊழியா் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Air India employee died while on duty!
Air India employee died while on duty!
author img

By

Published : Jan 20, 2021, 11:59 AM IST

சென்னை அயனாவரத்தை சோ்ந்தவர் பசுபதி ராஜன்(57). இவர், சென்னை விமானநிலையத்தில் உள்ள ஏா் இந்தியா அலுவலகத்தில் கமா்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றிவந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) வழக்கம்போல் பசுபதி ராஜன் பணிக்கு சென்றார். அப்போது, நேற்று இரவு சிக்காகோவிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏா்இந்தியா விமானம் நடைமேடை 25இல் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வந்த பாா்சல்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா். அங்கு பசுபதி ராஜனுக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனர்.

பணியிலிருந்தபோதே உயிரிழந்த ஏா் இந்தியா ஊழியா்!

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை விமானநிலைய காவல்துறையினர், பசுபதி ராஜனின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏா் இந்தியா ஊழியா் ஒருவா் விமான நிலையத்தில் பணியிலிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தை சோ்ந்தவர் பசுபதி ராஜன்(57). இவர், சென்னை விமானநிலையத்தில் உள்ள ஏா் இந்தியா அலுவலகத்தில் கமா்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றிவந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) வழக்கம்போல் பசுபதி ராஜன் பணிக்கு சென்றார். அப்போது, நேற்று இரவு சிக்காகோவிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏா்இந்தியா விமானம் நடைமேடை 25இல் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வந்த பாா்சல்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா். அங்கு பசுபதி ராஜனுக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனர்.

பணியிலிருந்தபோதே உயிரிழந்த ஏா் இந்தியா ஊழியா்!

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை விமானநிலைய காவல்துறையினர், பசுபதி ராஜனின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏா் இந்தியா ஊழியா் ஒருவா் விமான நிலையத்தில் பணியிலிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.