ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை : பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்

author img

By

Published : Mar 19, 2022, 2:09 PM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்று உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை : பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்
தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை : பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை, உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றார்.

வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்

மேலும், வேளாண்மையில் ஈடுபடும் ஆள் பற்றாக்குறையைக் கருவிகள் கொண்டே நிரப்ப வேண்டிய நிலைமை நீடிக்கிறது. அறுப்பதற்கும், நடுவதற்கும், களையெடுப்பதற்கும், களமடிப்பதற்கும், கனி பறிப்பதற்கும் கருவிகள் வந்து விட்டன. உழவுத் துறையை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று இன்று. விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க, 2022-23 ஆம் ஆண்டில் 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து
ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து

இத்திட்டத்தின் கீழ் சிறிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

விதை முதல் விளைச்சல் வரை... மின்னணு வேளாண்மை திட்டம்..!

இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப்பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு எண்ணூறு ரூபாய் வீதம் அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமார் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

இத்திட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய கருவிகளை வாடகைக்கு வழங்கி, பெண் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 736 கருவி வங்கிகள் அமைக்கப்படும்" என்றார்.

தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை
தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை

பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கடந்தாண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்
பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்பு : அமைச்சரின் பட்ஜெட் உரை...

சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை, உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றார்.

வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்

மேலும், வேளாண்மையில் ஈடுபடும் ஆள் பற்றாக்குறையைக் கருவிகள் கொண்டே நிரப்ப வேண்டிய நிலைமை நீடிக்கிறது. அறுப்பதற்கும், நடுவதற்கும், களையெடுப்பதற்கும், களமடிப்பதற்கும், கனி பறிப்பதற்கும் கருவிகள் வந்து விட்டன. உழவுத் துறையை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று இன்று. விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க, 2022-23 ஆம் ஆண்டில் 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து
ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து

இத்திட்டத்தின் கீழ் சிறிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

விதை முதல் விளைச்சல் வரை... மின்னணு வேளாண்மை திட்டம்..!

இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப்பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு எண்ணூறு ரூபாய் வீதம் அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமார் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

இத்திட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய கருவிகளை வாடகைக்கு வழங்கி, பெண் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 736 கருவி வங்கிகள் அமைக்கப்படும்" என்றார்.

தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை
தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் வேளாண்மை

பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கடந்தாண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்
பயிர் வளர்ச்சி நிலை கண்டறிய ட்ரோன்கள்

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்பு : அமைச்சரின் பட்ஜெட் உரை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.