ETV Bharat / state

'பெண்கள் சமூக வலைதளங்களில் கவனமா இருங்க' - ஏடிஜிபி ரவி

author img

By

Published : Apr 30, 2020, 12:22 PM IST

சென்னை: பெண்கள், குழந்தைகள் கவனத்துடன் சமூக வலைதளங்களைக் கையாள வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி அறிவுறுத்தியுள்ளார்.

ADGP Ravi advised that women and children should be careful on social networks
ADGP Ravi advised that women and children should be careful on social networks

இதுதொடர்பாக பேசியுள்ள ஏடிஜிபி ரவி, “நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி (27) எஎன்பவர் சமூக வலைதளங்களில் போலியான பெயரில் ஐடிக்களை தொடங்கி, சுமார் 80 பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துள்ளார். மேலும் அவர் தான் ஒரு உடற்பயிற்சி டிரெய்னர், யோகா டிரெய்னர் போன்ற பல்வேறு பொய்களைக் கூறி அவர் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக மருத்துவர்கள், ஐடி ஊழியர்கள் என படித்த பெண்களே இவரிடம் ஏமாந்து பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

ஏடிஜிபி ரவி
எனவே சமூக வலைதளங்களை பெண்கள், குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் கையாள வேண்டும். சமூக வலைதளங்களில் தெரியாத நபருடன் பெண்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியாளர்களிடம் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள ஏடிஜிபி ரவி, “நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி (27) எஎன்பவர் சமூக வலைதளங்களில் போலியான பெயரில் ஐடிக்களை தொடங்கி, சுமார் 80 பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துள்ளார். மேலும் அவர் தான் ஒரு உடற்பயிற்சி டிரெய்னர், யோகா டிரெய்னர் போன்ற பல்வேறு பொய்களைக் கூறி அவர் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக மருத்துவர்கள், ஐடி ஊழியர்கள் என படித்த பெண்களே இவரிடம் ஏமாந்து பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

ஏடிஜிபி ரவி
எனவே சமூக வலைதளங்களை பெண்கள், குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் கையாள வேண்டும். சமூக வலைதளங்களில் தெரியாத நபருடன் பெண்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியாளர்களிடம் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.