ETV Bharat / state

முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்; கல்லூரிகளில் பணியாற்ற தடை!

author img

By

Published : Mar 31, 2019, 4:31 PM IST

Updated : Apr 1, 2019, 7:10 AM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கடந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்வில் மாணவர்களுக்கு உதவிய விரிவுரையாளரை எந்தக் கல்லுாரியிலும் பணியில் சேர்க்கக் கூடாது என பல்கலைகழகப் பதிவாளர் குமார் அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அண்ணா பல்கலைக் கழகம்

பொறியியல் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சார்பில் தேர்வு எழுத காலநீட்டிப்பு அளிக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கைவைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் பருவத்தில் மாணவர்கள் சிறப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.

அரசின் உத்தரவை ஏற்ற அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான சுற்றோலையை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பியது. அதன்படி சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவதற்கான அட்டவணையை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடத்தப்பட்டன.

இதையடுத்து பல்கலைகழகம் சார்பில் பிப்ரவரி 6ஆம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வில் முறைகேடு நடந்ததும், இதற்காக அலுவர்கள் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டதும் தெரியவந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மார்ச் 12ஆம் தேதி இச்சம்பவத்தில் தொடர்புடைய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட132 மாணவர்களுக்கும், அவர்கள் தேர்வு எழுதிய கல்லுாரிகளுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதி உள்ளதோடு, மாணவர்களையும் அழைத்து விசாரணையும் நடத்திவருகிறது.

ANNA UNIVERSIITY
பல்கலை கழக உத்தரவு


இதையடுத்து தேர்வு முறைகேட்டிற்கு உதவியாக இருந்த கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் டெக்னாலாஜி கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவரை வேறு எந்த கல்லுாரியிலும் பணியில் சேர்க்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் மார்ச் 19ஆம் தேதி அனைத்து தனியார் பொறியியல் கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் தீர்மானம் எண் 251.18 நாள் 6.2.2019 அடிப்படையில்,கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்டு டெக்னாலாஜி கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவர் 2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் 2018 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்விற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், எந்தக் கல்லுாரியிலும் பணியில் சேர்க்க வேண்டாம் என அதில் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக உத்தரவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பொறியியல் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சார்பில் தேர்வு எழுத காலநீட்டிப்பு அளிக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கைவைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் பருவத்தில் மாணவர்கள் சிறப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.

அரசின் உத்தரவை ஏற்ற அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான சுற்றோலையை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பியது. அதன்படி சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவதற்கான அட்டவணையை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடத்தப்பட்டன.

இதையடுத்து பல்கலைகழகம் சார்பில் பிப்ரவரி 6ஆம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வில் முறைகேடு நடந்ததும், இதற்காக அலுவர்கள் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டதும் தெரியவந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மார்ச் 12ஆம் தேதி இச்சம்பவத்தில் தொடர்புடைய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட132 மாணவர்களுக்கும், அவர்கள் தேர்வு எழுதிய கல்லுாரிகளுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதி உள்ளதோடு, மாணவர்களையும் அழைத்து விசாரணையும் நடத்திவருகிறது.

ANNA UNIVERSIITY
பல்கலை கழக உத்தரவு


இதையடுத்து தேர்வு முறைகேட்டிற்கு உதவியாக இருந்த கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் டெக்னாலாஜி கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவரை வேறு எந்த கல்லுாரியிலும் பணியில் சேர்க்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் மார்ச் 19ஆம் தேதி அனைத்து தனியார் பொறியியல் கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் தீர்மானம் எண் 251.18 நாள் 6.2.2019 அடிப்படையில்,கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்டு டெக்னாலாஜி கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவர் 2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் 2018 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்விற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், எந்தக் கல்லுாரியிலும் பணியில் சேர்க்க வேண்டாம் என அதில் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக உத்தரவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 
சிறப்பு தேர்வில் முறைகேட்டுக்கு உதவிய
விரிவுைரயாளரை  எந்த கல்லுாரியில் சேர்க்க கூடாது 
அண்ணாப் பல்கலைக் கழகம் அதிரடி உத்தரவு 
சென்னை, 
அண்ணாப் பல்கலைக் கழகம் கடந்த 2010 ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு எழுதியவர்களுக்கு உதவிய விரிவுரையாளரை எந்த கல்லுாரியிலும் சேர்க்க கூடாது என பதிவாளர் குமார் அதிரடியாக அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். 


தமிழகத்தில் உள்ள  பொறியியல் கல்லுரிகளில் 2010 ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுவதற்கான கால நீடிப்பு 2018 ஆகஸ்ட் வரை அளிக்கப்படுகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
  அண்ணாப் பல்கலைக் கழகத்தில் பாெறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் 7 ஆண்டுகளில் படிப்பில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் வெவ்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளின் கீழ் நிலுவையில்  உள்ள தேர்வுகளை நடைமுறைத் தேர்வுகளோடு இணைந்தே நடத்தி வருகிறது. 
இத்தகைய தேர்வுகள் நடத்த ஒவ்வொரு பருவக் காலத் தேர்வுக்கும் 45 முதல் 50 நாட்கள் ஆகின்றன. இது தற்பொழுதுள்ள பாடத்திட்டத்தை பாதிப்பதுடன், தேர்வு முடிவுகளை அறிவிப்பதிலும் காலத் தாமத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாடுகளில் மேல்படிப்பிற்கும், வேலைத் தேடியும் செல்லும் மாணவர்களை இது பாதிக்கிறது. மேலும் இது புதியப் பாடத்திட்ட விதிகளின் படி மாணவர்கள் தொழிற்கல்வி பயில போதிய அவகாசம் பெற்று உள்ளிருப்பு பயிற்சி மற்றும் ஜி.ஆர்.இ.,டோபல், கேட் போன்ற தேர்வுகளில் பங்கேற்க வழிச் செய்யும் முறையையும் பாதிக்கிறது. 
  எனவே நடைமுறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுகளை சிரமமின்றியும், வெற்றிகரமாகவும் நல்ல முறையில் எழுதும் பொருட்டு, பல்கலைக் கழகத்துறை மற்றும் சுய ஆட்சி கல்வி நிறுவனங்கள் அண்ணாப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள கல்லுரிகளில் இளநிலை, முதுநிலை பாெறியியல் (முழுநேரம், பகுதி நேரம்) மாணவர்கள் தங்களுக்கு இதுவரை அனுமதித்த கால அவகாசத்திற்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் இனி தேர்வு எழுத இயலாது என அண்ணாப் பல்கலைக் கழகத்தால் அறிவித்தது.
 கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டும், இதுவரை தங்களுடைய பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்   இருந்து அரசிற்கு வர பெற்ற கோரிக்கையினை பரிசீலித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் அரசு, 2010 ம் ஆண்டு வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 
ஏற்கனவே அளிக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்த தவறிய மாணவர்கள் இன்னும் 2 பருவ காலங்களில் மட்டும் சிறப்பு நிகழ்வாக கருதி பிப்ரவரி 2018, ஆகஸ்ட் 2018 பருவத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இது போன்று 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுத வேண்டி உள்ளனர் என அண்ணாப் பல்கலைக் கழகம் கடந்த  2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.
 அதனைத் தொடர்ந்து அண்ணாப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்டவணையை வெளியிட்டு, தேர்வினை நடத்தியது. ஆனால் இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தற்பொழுது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 6.2.2019 அன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக சிறப்பு தேர்வு நவம்பர்,டிசம்பர் 2017 மற்றும் பிப்ரவரி, மார்ச் 2108 ஆகியவற்றின் போது பல்வேறு முறைகேடுகள் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் நடைபெற்றுள்ளது என்பது குறித்த புகார் வந்துள்ளது. அதனை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
அப்போது மண்டல அளவில் தேர்வு நடத்தும் அதிகாரிகளின் துணையுடன் விடைத்தாள் வெளியில் எடுத்து சென்று எழுதி அளிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மண்டல அலுவலகத்தில் பணியாற்றிவர்கள் மாணவர்களின் விடைத்தாள்களை  கட்டில் வைப்பதற்கு ருபாய் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதும் உறுதியாகி உள்ளது. 
மேலும் மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களை வெளியில் எடுத்து சென்று எழுதி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. பணம் பெற்றுக் கொண்டு உதவியதை விசாரணை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.  எனவே அதில் தொடர்புடையவர்களுக்கு தண்டிக்கும் வகையில் தினக்கூலிப் பணியாளர்களை நிரந்தரமாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12 ந் தேதி 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அவர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டதாக 132 மாணவர்களுக்கும், அவர்கள் தேர்வு எழுதிய கல்லுாரிகளுக்கு அண்ணாப் பல்கலைக் கழகம் கடிதம் எழுதி உள்ளது.  அதன் அடிப்படையில் மாணவர்களை அழைத்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வு முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்து கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அண்ணாப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்வு முறைகேட்டிற்கு உதவியாக இருந்த விரிவுைரயாளரை வேறு எந்த கல்லுாரியிலும் சேர்க்க கூடாது என  அண்ணாப் பல்கலைக்கழக பதிவாளர் குமார் கடந்த 19.3.2019 அன்று அனைத்து தனியார் பொறியியல் கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் தீர்மானம் எண் 251.18 நாள் 6.2.2019 அடிப்படையில்,. கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்டு டெக்னாலாஜி கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்றி வரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவர் சிறப்பு தேர்வு நவம்பர்,டிசம்பர் 2017 மற்றும் பிப்ரவரி ,மார்ச் 2018 ல் நடத்தப்பட்டபோது தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்த போது  முறைகேட்டிற்கு துணையாக இருந்துள்ளார். 
எனவே இவரை எந்தக் கல்லுாரியிலும் பணியில் சேர்க்க வேண்டாம் என அதில் கூறியுள்ளார். 
இதனால் தனியார் பொறியியல் கல்லுாரியில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 







Last Updated : Apr 1, 2019, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.