ETV Bharat / state

பாலாற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 31, 2022, 10:01 PM IST

செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் உள்ள பாலாற்றில் மூழ்கி இரண்டு சிறுமியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலாற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு
பாலாற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். இன்று ஜூலை 31ஆம் தேதி அவர்கள் சென்னை திரும்பினர். அப்போது செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று படுகையில் அனைவரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

எதிர்பாராத விதமாக, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் இரு சிறுமியர் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற முயன்ற சீனிவாசன் என்பவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும் விரைந்து வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு உயிரிழந்த மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:'சோழத்து பெருமை சொல்ல சொல் பூத்து நிக்கும்..!' - 'பொன்னி நதி' முதல் பாடல் வெளியீடு!

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். இன்று ஜூலை 31ஆம் தேதி அவர்கள் சென்னை திரும்பினர். அப்போது செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று படுகையில் அனைவரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

எதிர்பாராத விதமாக, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் இரு சிறுமியர் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற முயன்ற சீனிவாசன் என்பவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும் விரைந்து வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு உயிரிழந்த மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:'சோழத்து பெருமை சொல்ல சொல் பூத்து நிக்கும்..!' - 'பொன்னி நதி' முதல் பாடல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.