ETV Bharat / sitara

தமிழின் காதலன் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

author img

By

Published : Jul 13, 2019, 7:06 AM IST

Updated : Jul 13, 2019, 1:04 PM IST

"வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலித்துப் பார்" என்ற இவரது காதல் கவிதையை காதலிப்பவர்கள் யாரும் கேட்காமல் இருந்திருக்க முடியாது. இதை கேட்பவர்கள் யாரும் காதலிக்காமல் இருக்க முடியாது.

VAIRAMUTHU

சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பர்களுடன் ஒரு நாள் மாலை நான்கு மணி அளவில், வடபழனியில் பேருந்துக்குள் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று நாங்கள் இருந்த பேருந்தின் அருகே சட்டென்று வந்து நின்றது கருப்பு நிற கார். உள்ளே வெள்ளை ஜிப்பாவில் மிடுக்காக ஒரு மனிதன் அமர்ந்திருந்தார். சட்டென்று குதூகலமாகிய நாங்கள் அவரை நோக்கிக் கையசைக்க ஒரு புன்சிரிப்பும், ஒரு சின்ன கையசைவும் எங்களுக்குப் பதிலாகக் கிடைத்தது.

வைரமுத்து
வைரமுத்து

அவ்வளவுதான், சிக்னல் விழுந்து வண்டிகள் செல்ல ஆரம்பித்துவிட்டன. வெறும் இரண்டு நிமிடங்கள்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சரியில்லாத ஒரு படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய எங்களுக்கு அவரது புன்சிரிப்பும், மிடுக்கும் தந்த உற்சாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. படத்தில் நான்கு பஞ்ச் டயலாக் பேசி சண்டைக் காட்சிகளில் வில்லன்களைப் பறக்கவிடும் ஹீரோவுக்கு அந்த ஈர்ப்பும், காந்த சக்தியும் இருப்பது சாதாரணம். ஆனால் ஒரு கவிஞருக்கு, ஒரு பாடலாசிரியருக்கு அந்த ஆற்றல் இருக்கிறதென்றால், அது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமே.

ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றபோது
ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றபோது...

கவிஞரும் வறுமையும்

கவிஞரின் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது. கவிஞர் பிறந்தது இன்றைய வைகை ஆற்றுப்படுகையில் மூழ்கிப்போன 16 ஊர்களில் ஒன்றான மெட்டூர் என்ற கிராமம். அவரை வளர்த்ததோ இன்றைய தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி கிராமத்தின் கடும் வறுமையே அவரை வளர்த்தது. பின்னாட்களில் தனது வடுகபட்டி வாழ்க்கையை நினைவு கூறும்போது, "வறுமையே எங்கள் ஆசான்" என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வறுமையே ஒருவனுக்குச் செல்வத்தை, வாழ்க்கையை, நேரத்தை, மனிதர்களை, ‌எதிர்காலத்தை, லட்சியங்களை கற்றுக் கொடுப்பதாகக் கூறுகிறார் இந்த ஆச்சரியக் கவிஞர்.

வைரமுத்து
வைரமுத்து

கவிஞரும் இசைஞானியும்

பத்மபூஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி விருது, ஏழு தேசிய விருதுகள், பல மாநில விருதுகள், சினிமா விருதுகள் என்று பெற்றிருக்கும் இவரது பேனா இன்றோ நேற்றோ எழுதத்தொடங்கியது இல்லை. 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரின் மனைவிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மனைவியை அனுமதித்துவிட்டு வரும்பொழுது திடீரென்று அலைபேசியில் அழைப்பு. எடுத்தால் மறுபுறம், இளையராஜாவும் பாரதிராஜாவும் உங்களுக்காக மெட்டுடன் காத்திருக்கிறார்கள், விரைவாக அட்லாண்டா ஹோட்டலிலுள்ள 114ஆம் அறைக்குச் செல்லுங்கள் என்ற செய்தி.

பாலச்சந்தர், வைரமுத்து, பாரதிராஜா, ஸ்ரீதர்
பாலச்சந்தர், வைரமுத்து, பாரதிராஜா, ஸ்ரீதர்

அட்லாண்டா ஹோட்டலுக்கு செல்கிறார் அந்த அலுவலர். இசைஞானி இசைக்கிறார், அந்த அரசு அலுவலர் கூர்ந்து கவனிக்கிறார். பாரதிராஜா அப்போது, ”கவிஞர் வேற புதுசு நீ வேற மெட்டப்போட்டு மிரட்டியிருக்க, ரெண்டு நாள் டைம் கொடுப்போம்” என்று எழுகிறார். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் அந்த அலுவலர், "இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்..." என்று பல்லவியை கூறுகிறார். அச்சமயத்தில் அந்த அலுவலருக்குக் குழந்தை மட்டும் பிறக்கவில்லை, இந்த தமிழ்ச் சமூகத்தில் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருந்த கவிஞரும் பிறந்தார். ஆம், அந்த குழந்தை தான் மதன் கார்க்கி, அந்த அலுவலர் வேறு யாராக இருக்க முடியும் வைரமுத்து தான்.

கலைஞர், அன்பழகனுடன் வைரமுத்து
கலைஞர், அன்பழகனுடன் வைரமுத்து

கவிஞரும் இசைப்புயலும்

இந்த மாபெரும் கூட்டணி பல வருடங்கள் வெற்றிகரமாக திகழ்ந்தது. எதிர்பாராத விதமாக 1986ஆம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' திரைப்படமே இந்த கூட்டணியைத் தமிழ் சமூகம் ரசிக்கக் கிடைத்த இறுதி வாய்ப்பாக அமைந்தது. பின்னாட்களில் இந்தப் பிளவு குறித்து, தனது 'ஆயிரம் பாடல்கள்' என்ற புத்தகத்தில் வைரமுத்து இப்படி கூறுகிறார், "இந்த (இளையராஜா - வைரமுத்து) கூட்டணி உடைந்ததற்கு அதிகப்படியான சுயமரியாதைதான் காரணம். அதிகப்படியான சுயமரியாதையும் மூடநம்பிக்கைதானே"

மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான்
மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான்

பின்னர் ஒரு ஐந்து வருடங்களாக எந்த ஒரு பெரிய படமுமின்றி இருந்தார் வைரமுத்து. 1992 பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்க அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரோஜா'. சலனமின்றி இருந்த நீரில் விழுந்த பாறை எழுப்பும் சத்தத்தைப் போல ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் எழுதிய பாடலும் சத்தத்தை எழுப்பியது. கைதட்டல் என்ற சப்தம் மட்டுமல்ல, தேசிய விருதும்தான்! அங்கு மீண்டும் தொடங்கிய அவரது அசுரப் பாய்ச்சல் 38 வருடங்களாக டாப் கியரில்தான் செல்கிறது.

கமல், சத்தியராஜ் உடன் கவிஞர் வைரமுத்து
கமல், சத்தியராஜ் உடன் கவிஞர் வைரமுத்து

கவிஞரும் காதலும்

"வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலித்துப் பார்" என்ற இவரது காதல் கவிதையை காதலிப்பவர்கள் யாரும் கேட்காமலிருந்திருக்க முடியாது. இதை கேட்பவர்கள் யாரும் காதலிக்காமல் இருக்க முடியாது. அதேபோல் 1999ஆம் ஆண்டு வெளியான "மின்சாரக் கனவு" திரைப்படத்தில் காதலின் மென்மையை, "பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்... பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்.... அட, உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு" என்று எழுதியிருப்பார். இந்த உலகத்தில் ரசிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் தன் மனதுக்கு நெருக்கமான துணை இருந்தால்தான் அந்த ரசிப்புத்தன்மை நமது கண்களை பிரசவிக்கும். எனவே, நமது கண்களுக்கு பிரசவம் பார்த்து இந்த உலகை எப்படி ரசிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தவர் வைரமுத்து.

சிவாஜியுடன் வைரமுத்து
சிவாஜியுடன் வைரமுத்து

கவிஞரும் தத்துவமும்

மாபெரும் மன்னன் ஆன அலெக்ஸாண்டர் தான் மரணிக்கும் தருவாயில், பல நாடுகளைக் கைப்பற்றினாலும் போகும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை என்பதைக் காட்ட, சவப் பெட்டியில் கைகளை மட்டும் வெளியில் தெரியுமாறு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியிருப்பார். அதன் சாரத்தை மிக அழகாகப் பாமரனுக்கும் புரியும் வகையில் 'முத்து' படத்தில், "மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை... மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, அதை மனம்தான் உணர மறுக்கிறது" என்று கூறி இந்த உலகத்தில் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் பேராசை மீது போர் தொடுத்திருப்பார் பேரரசு.

ரஜினியுடன் கவிஞர் வைரமுத்து
ரஜினியுடன் கவிஞர் வைரமுத்து

உலகத்தில் மிகவும் கொடுமையானது நமக்கு எதுவும் இல்லாமல் இருப்பது இல்லை. எல்லாம் இருந்தும் அது நம்முடையது இல்லையே என்ற நிலைதான். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அவர் எழுதிய "விடைகொடு எங்கள் நாடே" பாடல் முழுவதும் அந்த ஏக்கத்தை நமக்கு கடத்தியிருப்பார்.

அதிலும் குறிப்பாக "கண் திறந்த தேசம் அங்கே... கண் மூடும் தேசம் எங்கே..." என்ற வரியில் உலகின் ஒட்டுமொத்த அகதிகளின் அவலத்தை அச்சு அசலாக படம் பிடித்து காண்பித்திருப்பார். உண்மையில் சொல்லப்போனால் இந்த பாடலுக்கு ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து அவருக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். ”தங்கத்தைப் பூட்டி வைத்தாய் வைரத்தைப் பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு” என்று அவர் எழுதிய வரிகளில்தான் எவ்வளவு தத்துவங்கள் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன. கண்ணதாசனின் தத்துவம் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வைரமுத்துவின் தத்துவம் நிரப்பியது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் கண்ணதாசன் வைரமுத்து!

முன்னால் பிரதமர் வாஜ்பாயுடன்
முன்னால் பிரதமர் வாஜ்பாயுடன்

கவிஞரும் தாயும்

ஊரிலுள்ள அனைவருக்கும் கவிதைகளும், பாடல்களும் எழுதிய வைரமுத்து தன்னை பெற்று வளர்த்த தாய்க்கு நீண்ட காலமாகக் கவிதை எழுதாதக் குறையைப் போக்கக் கலைஞர் முன்னிலையில் அரங்கேற்றினார் தன் தாய்க்கான கவிதையை. "ஆயிரம்தான் கவி சொன்னேன்... அழகழகா பொய் சொன்னேன்... பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலயே..." என்று தொடங்கிய அந்த கவிதை "வைகையில ஊரு முழுக... வல்லூறும் சேர்ந்தெழுக... கைப்பிடியாய்க் கூட்டிவந்து கர சேர்த்து விட்டவளே... எனக்கு ஒன்னு ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு... உனக்கு ஒன்னு ஆச்சுதுனா எனக்கு வேறு தாய் இருக்கா?" என்று அவர் முடிக்கும்போது அவரது கண்களில் மட்டுமல்ல அரங்கில் கூடியிருந்த அத்தனை பேரின் கண்களும் நனைந்திருந்தது. வாலி எழுதிய அம்மா என்றழைக்காத பாடல் போல் இந்த கவிதையையும் நாம் இன்னும் கொண்டாட வேண்டும். இது அவரை மிகைப்படுத்தி கூறுவதற்காக எழுதவில்லை, தற்கால அவசர சமூகத்தில், பெற்ற தாயை அனாதை ஆக்கி திரிகிறார்கள். இனி வரும் சமூகத்தில் இந்த நிலையை கொலை செய்ய வைரமுத்துவின் இந்த ஆயுதத்தை அனைவரின் கைகளிலும் கொடுக்க வேண்டும்.

கவிதை அரங்கேற்ற விழாவில் வைரமுத்து
கவிதை அரங்கேற்ற விழாவில் வைரமுத்து

கவிஞரும் கலைஞரும்

கவிஞர் வைரமுத்துவுக்குக் ”கவிப்பேரரசு” என்ற பெயரைச் சூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. 33 வருடங்கள் கடந்தும் தொடர்ந்த இவர்களது நட்பின் வெளிப்பாட்டுக்கு ஒரு உதாரணம் என்றால், “இந்த 33 வருடங்களில் ஒரு நாள் காலையில்கூட கலைஞருடன் பேசாமல் வைரமுத்து இருந்ததில்லை. வைரமுத்து மட்டும்தான் காலையில், ஒரு சூரியனை பார்ப்பார், மற்றொரு சூரியனுடன் பேசுவார். அதிசயமே அசந்து போகும் அதிசயம் அவர்.

குறிப்பாக, கலைஞர் உடல்நலமின்றி இருந்தபோது கலைஞருக்கு இவர் இயற்றிய, "பிடர்கொண்ட சிங்கமே பேசு" என்று தொடங்கும் கவிதையில்

"தீதொன்று தமிழுக் கென்றால்

தீக்கனல் போலெழும்பும்

கோதற்ற கலைஞரே

நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்"

கலைஞருடன் கவிஞர் வைரமுத்து
கலைஞருடன் கவிஞர் வைரமுத்து

என்று எழுதியிருப்பார். இது அவரது குரல் மட்டுமல்ல கலைஞருக்கான ஒவ்வொரு தமிழருடைய குரல் அது.

கவிஞரும் சர்ச்சையும்

செம்மொழியான தமிழ் மொழிக்கு அளப்பறியத் தொண்டாற்றிய 24 நபர்களைப் பற்றி ஆராய்ச்சி வடிவில் தினமணியில் ஒரு தொடர் எழுதியிருப்பார். அதில் ஆண்டாளைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. வரலாறு நெடுகிலும் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களைத் தமிழ் விரோதக் கூட்டம் எப்படி ஒடுக்கியதோ அதே போலத்தான் வைரமுத்துவையும் அச்சமயம் ஒடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி நின்றவர் வைரமுத்து. ஏனெனில் அவர்தான் பேரரசர் ஆயிற்றே.

ஆனால் ஒன்று வைரமுத்து என்கிற தனி மனிதன் மீது ஆயிரம் விமர்சனம் உண்டு, நிறையக் குறைகள் உண்டு, அவன் வெறுக்கப்படுவான், துரத்தப்படுவான், தாக்கப்படுவான், ஆனால் அவன் தமிழ் துரத்தப்படாது நேசிக்கப்படும், கொண்டாடப்படும். தற்போது வைரமுத்துவை தூற்றிக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே அவரது தமிழை ரகசிய அறையில் ரசித்துக்கொண்டுதான் இருப்பார்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் கவிப்பேரரசே!

சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பர்களுடன் ஒரு நாள் மாலை நான்கு மணி அளவில், வடபழனியில் பேருந்துக்குள் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று நாங்கள் இருந்த பேருந்தின் அருகே சட்டென்று வந்து நின்றது கருப்பு நிற கார். உள்ளே வெள்ளை ஜிப்பாவில் மிடுக்காக ஒரு மனிதன் அமர்ந்திருந்தார். சட்டென்று குதூகலமாகிய நாங்கள் அவரை நோக்கிக் கையசைக்க ஒரு புன்சிரிப்பும், ஒரு சின்ன கையசைவும் எங்களுக்குப் பதிலாகக் கிடைத்தது.

வைரமுத்து
வைரமுத்து

அவ்வளவுதான், சிக்னல் விழுந்து வண்டிகள் செல்ல ஆரம்பித்துவிட்டன. வெறும் இரண்டு நிமிடங்கள்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சரியில்லாத ஒரு படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய எங்களுக்கு அவரது புன்சிரிப்பும், மிடுக்கும் தந்த உற்சாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. படத்தில் நான்கு பஞ்ச் டயலாக் பேசி சண்டைக் காட்சிகளில் வில்லன்களைப் பறக்கவிடும் ஹீரோவுக்கு அந்த ஈர்ப்பும், காந்த சக்தியும் இருப்பது சாதாரணம். ஆனால் ஒரு கவிஞருக்கு, ஒரு பாடலாசிரியருக்கு அந்த ஆற்றல் இருக்கிறதென்றால், அது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமே.

ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றபோது
ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றபோது...

கவிஞரும் வறுமையும்

கவிஞரின் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது. கவிஞர் பிறந்தது இன்றைய வைகை ஆற்றுப்படுகையில் மூழ்கிப்போன 16 ஊர்களில் ஒன்றான மெட்டூர் என்ற கிராமம். அவரை வளர்த்ததோ இன்றைய தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி கிராமத்தின் கடும் வறுமையே அவரை வளர்த்தது. பின்னாட்களில் தனது வடுகபட்டி வாழ்க்கையை நினைவு கூறும்போது, "வறுமையே எங்கள் ஆசான்" என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வறுமையே ஒருவனுக்குச் செல்வத்தை, வாழ்க்கையை, நேரத்தை, மனிதர்களை, ‌எதிர்காலத்தை, லட்சியங்களை கற்றுக் கொடுப்பதாகக் கூறுகிறார் இந்த ஆச்சரியக் கவிஞர்.

வைரமுத்து
வைரமுத்து

கவிஞரும் இசைஞானியும்

பத்மபூஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி விருது, ஏழு தேசிய விருதுகள், பல மாநில விருதுகள், சினிமா விருதுகள் என்று பெற்றிருக்கும் இவரது பேனா இன்றோ நேற்றோ எழுதத்தொடங்கியது இல்லை. 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரின் மனைவிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மனைவியை அனுமதித்துவிட்டு வரும்பொழுது திடீரென்று அலைபேசியில் அழைப்பு. எடுத்தால் மறுபுறம், இளையராஜாவும் பாரதிராஜாவும் உங்களுக்காக மெட்டுடன் காத்திருக்கிறார்கள், விரைவாக அட்லாண்டா ஹோட்டலிலுள்ள 114ஆம் அறைக்குச் செல்லுங்கள் என்ற செய்தி.

பாலச்சந்தர், வைரமுத்து, பாரதிராஜா, ஸ்ரீதர்
பாலச்சந்தர், வைரமுத்து, பாரதிராஜா, ஸ்ரீதர்

அட்லாண்டா ஹோட்டலுக்கு செல்கிறார் அந்த அலுவலர். இசைஞானி இசைக்கிறார், அந்த அரசு அலுவலர் கூர்ந்து கவனிக்கிறார். பாரதிராஜா அப்போது, ”கவிஞர் வேற புதுசு நீ வேற மெட்டப்போட்டு மிரட்டியிருக்க, ரெண்டு நாள் டைம் கொடுப்போம்” என்று எழுகிறார். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் அந்த அலுவலர், "இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்..." என்று பல்லவியை கூறுகிறார். அச்சமயத்தில் அந்த அலுவலருக்குக் குழந்தை மட்டும் பிறக்கவில்லை, இந்த தமிழ்ச் சமூகத்தில் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருந்த கவிஞரும் பிறந்தார். ஆம், அந்த குழந்தை தான் மதன் கார்க்கி, அந்த அலுவலர் வேறு யாராக இருக்க முடியும் வைரமுத்து தான்.

கலைஞர், அன்பழகனுடன் வைரமுத்து
கலைஞர், அன்பழகனுடன் வைரமுத்து

கவிஞரும் இசைப்புயலும்

இந்த மாபெரும் கூட்டணி பல வருடங்கள் வெற்றிகரமாக திகழ்ந்தது. எதிர்பாராத விதமாக 1986ஆம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' திரைப்படமே இந்த கூட்டணியைத் தமிழ் சமூகம் ரசிக்கக் கிடைத்த இறுதி வாய்ப்பாக அமைந்தது. பின்னாட்களில் இந்தப் பிளவு குறித்து, தனது 'ஆயிரம் பாடல்கள்' என்ற புத்தகத்தில் வைரமுத்து இப்படி கூறுகிறார், "இந்த (இளையராஜா - வைரமுத்து) கூட்டணி உடைந்ததற்கு அதிகப்படியான சுயமரியாதைதான் காரணம். அதிகப்படியான சுயமரியாதையும் மூடநம்பிக்கைதானே"

மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான்
மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான்

பின்னர் ஒரு ஐந்து வருடங்களாக எந்த ஒரு பெரிய படமுமின்றி இருந்தார் வைரமுத்து. 1992 பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்க அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரோஜா'. சலனமின்றி இருந்த நீரில் விழுந்த பாறை எழுப்பும் சத்தத்தைப் போல ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் எழுதிய பாடலும் சத்தத்தை எழுப்பியது. கைதட்டல் என்ற சப்தம் மட்டுமல்ல, தேசிய விருதும்தான்! அங்கு மீண்டும் தொடங்கிய அவரது அசுரப் பாய்ச்சல் 38 வருடங்களாக டாப் கியரில்தான் செல்கிறது.

கமல், சத்தியராஜ் உடன் கவிஞர் வைரமுத்து
கமல், சத்தியராஜ் உடன் கவிஞர் வைரமுத்து

கவிஞரும் காதலும்

"வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலித்துப் பார்" என்ற இவரது காதல் கவிதையை காதலிப்பவர்கள் யாரும் கேட்காமலிருந்திருக்க முடியாது. இதை கேட்பவர்கள் யாரும் காதலிக்காமல் இருக்க முடியாது. அதேபோல் 1999ஆம் ஆண்டு வெளியான "மின்சாரக் கனவு" திரைப்படத்தில் காதலின் மென்மையை, "பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்... பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்.... அட, உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு" என்று எழுதியிருப்பார். இந்த உலகத்தில் ரசிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் தன் மனதுக்கு நெருக்கமான துணை இருந்தால்தான் அந்த ரசிப்புத்தன்மை நமது கண்களை பிரசவிக்கும். எனவே, நமது கண்களுக்கு பிரசவம் பார்த்து இந்த உலகை எப்படி ரசிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தவர் வைரமுத்து.

சிவாஜியுடன் வைரமுத்து
சிவாஜியுடன் வைரமுத்து

கவிஞரும் தத்துவமும்

மாபெரும் மன்னன் ஆன அலெக்ஸாண்டர் தான் மரணிக்கும் தருவாயில், பல நாடுகளைக் கைப்பற்றினாலும் போகும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை என்பதைக் காட்ட, சவப் பெட்டியில் கைகளை மட்டும் வெளியில் தெரியுமாறு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியிருப்பார். அதன் சாரத்தை மிக அழகாகப் பாமரனுக்கும் புரியும் வகையில் 'முத்து' படத்தில், "மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை... மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, அதை மனம்தான் உணர மறுக்கிறது" என்று கூறி இந்த உலகத்தில் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் பேராசை மீது போர் தொடுத்திருப்பார் பேரரசு.

ரஜினியுடன் கவிஞர் வைரமுத்து
ரஜினியுடன் கவிஞர் வைரமுத்து

உலகத்தில் மிகவும் கொடுமையானது நமக்கு எதுவும் இல்லாமல் இருப்பது இல்லை. எல்லாம் இருந்தும் அது நம்முடையது இல்லையே என்ற நிலைதான். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அவர் எழுதிய "விடைகொடு எங்கள் நாடே" பாடல் முழுவதும் அந்த ஏக்கத்தை நமக்கு கடத்தியிருப்பார்.

அதிலும் குறிப்பாக "கண் திறந்த தேசம் அங்கே... கண் மூடும் தேசம் எங்கே..." என்ற வரியில் உலகின் ஒட்டுமொத்த அகதிகளின் அவலத்தை அச்சு அசலாக படம் பிடித்து காண்பித்திருப்பார். உண்மையில் சொல்லப்போனால் இந்த பாடலுக்கு ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து அவருக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். ”தங்கத்தைப் பூட்டி வைத்தாய் வைரத்தைப் பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு” என்று அவர் எழுதிய வரிகளில்தான் எவ்வளவு தத்துவங்கள் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன. கண்ணதாசனின் தத்துவம் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வைரமுத்துவின் தத்துவம் நிரப்பியது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் கண்ணதாசன் வைரமுத்து!

முன்னால் பிரதமர் வாஜ்பாயுடன்
முன்னால் பிரதமர் வாஜ்பாயுடன்

கவிஞரும் தாயும்

ஊரிலுள்ள அனைவருக்கும் கவிதைகளும், பாடல்களும் எழுதிய வைரமுத்து தன்னை பெற்று வளர்த்த தாய்க்கு நீண்ட காலமாகக் கவிதை எழுதாதக் குறையைப் போக்கக் கலைஞர் முன்னிலையில் அரங்கேற்றினார் தன் தாய்க்கான கவிதையை. "ஆயிரம்தான் கவி சொன்னேன்... அழகழகா பொய் சொன்னேன்... பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலயே..." என்று தொடங்கிய அந்த கவிதை "வைகையில ஊரு முழுக... வல்லூறும் சேர்ந்தெழுக... கைப்பிடியாய்க் கூட்டிவந்து கர சேர்த்து விட்டவளே... எனக்கு ஒன்னு ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு... உனக்கு ஒன்னு ஆச்சுதுனா எனக்கு வேறு தாய் இருக்கா?" என்று அவர் முடிக்கும்போது அவரது கண்களில் மட்டுமல்ல அரங்கில் கூடியிருந்த அத்தனை பேரின் கண்களும் நனைந்திருந்தது. வாலி எழுதிய அம்மா என்றழைக்காத பாடல் போல் இந்த கவிதையையும் நாம் இன்னும் கொண்டாட வேண்டும். இது அவரை மிகைப்படுத்தி கூறுவதற்காக எழுதவில்லை, தற்கால அவசர சமூகத்தில், பெற்ற தாயை அனாதை ஆக்கி திரிகிறார்கள். இனி வரும் சமூகத்தில் இந்த நிலையை கொலை செய்ய வைரமுத்துவின் இந்த ஆயுதத்தை அனைவரின் கைகளிலும் கொடுக்க வேண்டும்.

கவிதை அரங்கேற்ற விழாவில் வைரமுத்து
கவிதை அரங்கேற்ற விழாவில் வைரமுத்து

கவிஞரும் கலைஞரும்

கவிஞர் வைரமுத்துவுக்குக் ”கவிப்பேரரசு” என்ற பெயரைச் சூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. 33 வருடங்கள் கடந்தும் தொடர்ந்த இவர்களது நட்பின் வெளிப்பாட்டுக்கு ஒரு உதாரணம் என்றால், “இந்த 33 வருடங்களில் ஒரு நாள் காலையில்கூட கலைஞருடன் பேசாமல் வைரமுத்து இருந்ததில்லை. வைரமுத்து மட்டும்தான் காலையில், ஒரு சூரியனை பார்ப்பார், மற்றொரு சூரியனுடன் பேசுவார். அதிசயமே அசந்து போகும் அதிசயம் அவர்.

குறிப்பாக, கலைஞர் உடல்நலமின்றி இருந்தபோது கலைஞருக்கு இவர் இயற்றிய, "பிடர்கொண்ட சிங்கமே பேசு" என்று தொடங்கும் கவிதையில்

"தீதொன்று தமிழுக் கென்றால்

தீக்கனல் போலெழும்பும்

கோதற்ற கலைஞரே

நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்"

கலைஞருடன் கவிஞர் வைரமுத்து
கலைஞருடன் கவிஞர் வைரமுத்து

என்று எழுதியிருப்பார். இது அவரது குரல் மட்டுமல்ல கலைஞருக்கான ஒவ்வொரு தமிழருடைய குரல் அது.

கவிஞரும் சர்ச்சையும்

செம்மொழியான தமிழ் மொழிக்கு அளப்பறியத் தொண்டாற்றிய 24 நபர்களைப் பற்றி ஆராய்ச்சி வடிவில் தினமணியில் ஒரு தொடர் எழுதியிருப்பார். அதில் ஆண்டாளைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. வரலாறு நெடுகிலும் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களைத் தமிழ் விரோதக் கூட்டம் எப்படி ஒடுக்கியதோ அதே போலத்தான் வைரமுத்துவையும் அச்சமயம் ஒடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி நின்றவர் வைரமுத்து. ஏனெனில் அவர்தான் பேரரசர் ஆயிற்றே.

ஆனால் ஒன்று வைரமுத்து என்கிற தனி மனிதன் மீது ஆயிரம் விமர்சனம் உண்டு, நிறையக் குறைகள் உண்டு, அவன் வெறுக்கப்படுவான், துரத்தப்படுவான், தாக்கப்படுவான், ஆனால் அவன் தமிழ் துரத்தப்படாது நேசிக்கப்படும், கொண்டாடப்படும். தற்போது வைரமுத்துவை தூற்றிக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே அவரது தமிழை ரகசிய அறையில் ரசித்துக்கொண்டுதான் இருப்பார்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் கவிப்பேரரசே!

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 13, 2019, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.