ETV Bharat / sitara

'கேஜிஎஃப் 2' ராக்கி பாய் வரும் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jan 29, 2021, 6:48 PM IST

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கேஜிஎஃப் 2' திரைப்படம் வெளியாகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

kgf
kgf

கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியானது 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ்(Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி முத்திரையை பதித்தது. தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம், கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக, படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுற்றுள்ளது. சஞ்சய் தத், யாஷ் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு அத்துடன் படப்பிடிப்பு முடிவுற்றது.

பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தின் டீஸர், யாஷ் பிறந்தநாளன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6.32 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் #KGFChapter2onJuly16, #KGFChapter2 என்ற ஹேஷ் டேக்குடன் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியானது 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ்(Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி முத்திரையை பதித்தது. தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம், கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக, படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுற்றுள்ளது. சஞ்சய் தத், யாஷ் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு அத்துடன் படப்பிடிப்பு முடிவுற்றது.

பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தின் டீஸர், யாஷ் பிறந்தநாளன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6.32 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் #KGFChapter2onJuly16, #KGFChapter2 என்ற ஹேஷ் டேக்குடன் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.