ETV Bharat / sitara

காண்ட்ராக்டர் நேசமணிக்காக களமிறங்கிய சூர்யா ரசிகர்!

சென்னை: ரோகிணி திரையரங்கிற்கு 'என்ஜிகே' படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், காண்ட்ராக்டர் நேசமணிக்காகத்தான் இப்படத்தை பார்க்க வந்தேன் என்று தெரிவித்தது சூர்யா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

author img

By

Published : May 31, 2019, 12:17 PM IST

என்ஜிகே

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியைக் காண காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் சூர்யாவின் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திரையிடப்பட்டது. நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு வந்திருக்கும் 'என்ஜிகே' படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் என்ஜிகே படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் பாக்யராஜும் வந்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், 'என்ஜிகே' படம் பார்க்க முக்கிய காரணமே காண்ட்ராக்டர் நேசமணிதான். அவர் மீது சுத்தியல் விழுந்து அடிபட்டபோது முதலில் காப்பாற்றியது நடிகர் சூர்யாதான். சூர்யா நேசமணி மீது வைத்த பாசத்திற்காகவே இப்படத்தை பார்க்க வந்தேன். சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளன என்று தெரிவித்தார்.

ரோகினி திரையரங்கம்

இதனையடுத்து, திண்டுக்கல், ஓசூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வந்த ரசிகர்கள் என்ஜிகே படம் குறித்த கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது, என்ஜிகே படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கிறது. படத்தை பார்க்கும்பொழுதே இது செல்வராகவன் படம் என்பது புரிகிறது. படம் திருப்திகரமாக உள்ளது. இது ஒரு சாதாரண படமாக எண்ணி, எதிர்பார்ப்போடு வருபவர்களுக்கு புரிவது கடினம்தான்.

இந்தப் படத்தை நான்கு முறை பார்த்தால் மட்டுமே புரியும். பக்கா செல்வராகவன் படம். சூர்யா இதில் நடித்திருந்தாலும் இது செல்வராகவன் படம்தான்' என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியைக் காண காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் சூர்யாவின் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திரையிடப்பட்டது. நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு வந்திருக்கும் 'என்ஜிகே' படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் என்ஜிகே படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் பாக்யராஜும் வந்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், 'என்ஜிகே' படம் பார்க்க முக்கிய காரணமே காண்ட்ராக்டர் நேசமணிதான். அவர் மீது சுத்தியல் விழுந்து அடிபட்டபோது முதலில் காப்பாற்றியது நடிகர் சூர்யாதான். சூர்யா நேசமணி மீது வைத்த பாசத்திற்காகவே இப்படத்தை பார்க்க வந்தேன். சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளன என்று தெரிவித்தார்.

ரோகினி திரையரங்கம்

இதனையடுத்து, திண்டுக்கல், ஓசூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வந்த ரசிகர்கள் என்ஜிகே படம் குறித்த கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது, என்ஜிகே படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கிறது. படத்தை பார்க்கும்பொழுதே இது செல்வராகவன் படம் என்பது புரிகிறது. படம் திருப்திகரமாக உள்ளது. இது ஒரு சாதாரண படமாக எண்ணி, எதிர்பார்ப்போடு வருபவர்களுக்கு புரிவது கடினம்தான்.

இந்தப் படத்தை நான்கு முறை பார்த்தால் மட்டுமே புரியும். பக்கா செல்வராகவன் படம். சூர்யா இதில் நடித்திருந்தாலும் இது செல்வராகவன் படம்தான்' என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.

காண்ட்ராக்டர் நேசமணிக்காக என் ஜி கே படம் பார்க்க வந்தேன் எனக் கூறும்் சூர்யா ரசிகர்கள்


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  
படம் வெளியாகும் திரையரங்குகளில் நடிகர் சூர்யாவின் புகைப்படத்திற்கு பாலபிஷேகம், சூடம் 
 ஆராதனை மற்றும் சூறைத் தேங்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாடினர்.

படத்தின் முதல் காட்சி இன்று காலை ஐந்து முப்பது மணிக்கு திரையிடப்பட்டது. இந்த காட்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு வந்திருக்கும் என் ஜி கே படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய படம் பார்ப்பதற்காக வந்திருந்தார்.

படம் பார்த்த ரசிகர்கள் கூறியது,

இந்த படம்  நான் பார்க்க முக்கிய காரணம்  காண்ட்ராக்டர் நேசமணி மீது சுத்தியல் வீழ்ந்து அடிபட்டபோது முதலில் காப்பாற்றியது நடிகர் சூர்யா தான். நடிகர் சூர்யா நேசமணி மீது வைத்த பாசத்திற்கு ஆகவே  இந்த படத்தை பார்க்க வந்தேன் படம் நன்றாக இருக்கிறது சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன 

செல்வராகவன் அனைவரிடத்திலும் நன்றாக வேலை வாங்கி உள்ளார் நன்றாக இருக்கிறது சில இடங்களில் தோய்வு இருப்பது போல் தோன்றும் ஆனால் படம் நன்றாக இருக்கும் புதுப்பேட்டை போன்று இந்த படத்தில் ஆபாச வசனங்கள் எதுவும் இல்லை அதனால் குடும்பத்தோடு சென்று இந்த படம் பார்க்கலாம்

திண்டுக்கல் ஓசூர் மதுரை போன்ற இடங்களில் வந்த ரசிகர்கள் பேசும்போது,

ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்த படம் வந்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு வந்தோம் வசனங்கள் நன்றாக இருக்கிறது பார்த்தாலே செல்வராகவன் படம் என்பது புரிகிறது நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்து உள்ளார்கள் படம் திருப்திகரமாக உள்ளது

இது ஒரு நார்மல் படமாக எண்ணி பார்க்க வந்தால் கண்டிப்பாக புரியாது எதிர்பார்ப்போடு வருபவர்களுக்கு படத்திலிருப்பது வேறாகத்தான் இருக்கும் இந்த படத்தை நாலைந்து முறை பார்த்தால் மட்டுமே புரியும். பக்கா செல்வராகவன் படம் சூர்யா இதில் நடித்திருந்தாலும் இது செல்வராகவன் படம் தான்

பெங்களூருவில் இருந்து என் ஜி கே படம்  பார்க்க வந்த ரசிகர்கள் கூறும்போது,

மாசான படம் வந்து இருக்கிறது அதற்காக நாங்கள் மாஸ் செய்வதற்காகவும் சூர்யா படத்தை சென்னையில் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் பெங்களூருவில் இருந்து வந்து இருக்கிறோம்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.