ETV Bharat / jagte-raho

ஒரு தலை காதலால் மாணவியின் உயிரை பறித்த கொடூரன்! - COLLEGE GIRL DIED WHO STABBED BY RELATIVE

திருச்சி: ஒருதலை காதலால் சொந்த உறவினரே கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தலை காதலால் மாணவியின் உயிரை பறித்த கொடூரன்!
author img

By

Published : Jun 15, 2019, 7:21 AM IST

திருச்சி தில்லைநகர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மீராவின் உறவினரான முரளி(34) ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில் முரளி, மீராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு மீரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

இதையடுத்து நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மீராவை வழிமறித்த முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 10க்கும் மேற்பட்ட முறை சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தில்லைநகர் காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த மீராவின் உறவினர்கள் முரளியைச் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த முரளி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் இரு தரப்பு உறவினர்களும் குவிந்து இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி தில்லைநகர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மீராவின் உறவினரான முரளி(34) ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில் முரளி, மீராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு மீரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

இதையடுத்து நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மீராவை வழிமறித்த முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 10க்கும் மேற்பட்ட முறை சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தில்லைநகர் காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த மீராவின் உறவினர்கள் முரளியைச் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த முரளி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் இரு தரப்பு உறவினர்களும் குவிந்து இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Intro:திருச்சியில் கல்லூரி மாணவி சரமாரி குத்திக்கொலை.Body:திருச்சி;
திருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஐயப்பன் இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா (22). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முரளி. (34). இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். முரளியும் மீராவும் உறவினர்கள். இந்நிலையில் முரளி மீராவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இததற்கு மீரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மீராவை வழிமறித்த முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 10 க்கும் மேற்பட்ட முறை சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே மீரா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் தில்லைநகர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீராவின் உறவினர்கள் முரளியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த முரளி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் இரு தரப்பு உறவினர்களும் குவிந்து இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.Conclusion:மீராவை கொலை செய்த முரளியை மீராவின் உறவினர்கள் அடித்து உதைத்தனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.