ETV Bharat / international

அமேசான் தீ விபத்து: கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 28% அதிகரிப்பு

author img

By

Published : Aug 3, 2020, 12:43 AM IST

பிரேசிலியா: பிரேசில் அமேசானில் ஏற்படும் தீ விபத்துக்கள் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 28 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் தீ விபத்து: கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 28 சதவீதம் அதிகரிப்பு!
Amazon fire accident

பிரேசிலைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் மட்டும் அமேசான் மழைக்காடுகளில் 6 ஆயிரத்து 803 முறை தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகப் பதிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 5 ஆயிரத்து 318ஆக இருந்தது.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த உயர்வு குறித்து கவலை தெரிவித்தனர். ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30 ஆயிரத்து 900 தீ விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. பிரேசில் மீண்டும் அதேபோல் தீ விபத்துக்கள் நிகழக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரேசிலின் அமேசானில் நிலத்தை அழிக்க அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அழைப்பு விடுத்துள்ளதற்கு மத்தியில் தீ விபத்து அதிகரித்துள்ளது.

அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்து, ஜூலை 16ஆம் தேதி, பான்டனல் ஈர நிலங்கள் மற்றும் அமேசான் காடுகளில் எரிக்க அரசாங்கம் நான்கு மாதங்கள் தடை விதித்தது. அமேசானில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ராணுவத்திற்கு மே மாதத்தில் போல்சனாரோ ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

ஆனால், வல்லுநர்கள் தீ விபத்துகளில் எண்ணிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் பதில் பயனுள்ளதாக இல்லை என்பதைக் குறிப்பதாகவும், இந்த ஆண்டின் வறண்ட காலம் கடந்த ஆண்டை விட தீ விபத்துக்கள் அதிகமாகும் வாய்ப்பையும் சுட்டிக்காட்டுகிறது. சாவ் பாலோ மாநில பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் கார்லோஸ் நோப்ரே, கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​காடழிப்பு குறியீடும் இந்த ஆண்டு ஜூலை வரை உயர்ந்துள்ளது என்றார்.

"ஜூலை இறுதி வரை தரவுகளுடன், தீ மற்றும் காடழிப்பைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறன் குறைவாக உள்ளது என்று நாங்கள் முடிவு செய்யலாம்," என்று அவர் கூறினார்.

ஜெர்மனியில் உள்ள மேம்பட்ட நிலைத்தன்மை ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த சக கார்லோஸ் ரிட்ல், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் அமேசானின் போக்குகள் கவலைக்குரியவை என்று கூறினார்.

பிரேசிலைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் மட்டும் அமேசான் மழைக்காடுகளில் 6 ஆயிரத்து 803 முறை தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகப் பதிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 5 ஆயிரத்து 318ஆக இருந்தது.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த உயர்வு குறித்து கவலை தெரிவித்தனர். ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30 ஆயிரத்து 900 தீ விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. பிரேசில் மீண்டும் அதேபோல் தீ விபத்துக்கள் நிகழக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரேசிலின் அமேசானில் நிலத்தை அழிக்க அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அழைப்பு விடுத்துள்ளதற்கு மத்தியில் தீ விபத்து அதிகரித்துள்ளது.

அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்து, ஜூலை 16ஆம் தேதி, பான்டனல் ஈர நிலங்கள் மற்றும் அமேசான் காடுகளில் எரிக்க அரசாங்கம் நான்கு மாதங்கள் தடை விதித்தது. அமேசானில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ராணுவத்திற்கு மே மாதத்தில் போல்சனாரோ ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

ஆனால், வல்லுநர்கள் தீ விபத்துகளில் எண்ணிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் பதில் பயனுள்ளதாக இல்லை என்பதைக் குறிப்பதாகவும், இந்த ஆண்டின் வறண்ட காலம் கடந்த ஆண்டை விட தீ விபத்துக்கள் அதிகமாகும் வாய்ப்பையும் சுட்டிக்காட்டுகிறது. சாவ் பாலோ மாநில பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் கார்லோஸ் நோப்ரே, கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​காடழிப்பு குறியீடும் இந்த ஆண்டு ஜூலை வரை உயர்ந்துள்ளது என்றார்.

"ஜூலை இறுதி வரை தரவுகளுடன், தீ மற்றும் காடழிப்பைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறன் குறைவாக உள்ளது என்று நாங்கள் முடிவு செய்யலாம்," என்று அவர் கூறினார்.

ஜெர்மனியில் உள்ள மேம்பட்ட நிலைத்தன்மை ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த சக கார்லோஸ் ரிட்ல், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் அமேசானின் போக்குகள் கவலைக்குரியவை என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.