ETV Bharat / international

சீனாவின் டிஜிட்டல் ஆயுதமா டிக்டாக்?

author img

By

Published : Jul 15, 2020, 3:33 AM IST

இந்தியாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்துச் சிந்தித்துவருவதால், தனக்கும் சீனா அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காட்டும் வகையில், சீனாவுக்கு வெளியே தனது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து அந்நிறுவனம் தீவிரமாக சிந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TikTok saga
TikTok saga

இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து.

மத்திய அரசு விதித்த இந்தத் தடையை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியானது. மேலும், இதுபோன்ற சீன செயலிகளின் தரவுகளைக் கொண்டு எதிரி நாடுகளை சீனா உளவு பார்ப்பதாகவும் வெளிநாட்டு தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்தியாவின் தடை உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஸ்மார்ட்போன்களிலுள்ள சீன செயலிகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா இதில் சரியான முடிவை எடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

அதிபரின் (ட்ரம்ப்) அறிவிப்பிற்கு முன், இதுகுறித்து நான் எதுவம் கூற விரும்பவில்லை. இருப்பினும், இதுகுறித்து பரிசீலனை செய்துவருகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வதில் உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் மட்டும் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரெலியாவும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் தரவுகள் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் உள்ள சர்வர்களில்தான் சேமிக்கப்படுகிறது என்றும் இதுவரை சீனா அரசு தரவுகளில் குறித்த எவ்வித வேண்டுகோளையும் விடுத்ததில்லை என்று டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால், சீனாவை போன்ற கம்யூனிச தேசத்தில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெறுவது என்பது கடினமான பணி அல்ல என்று துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

TikTok saga
சீனாவின் டிஜிட்டல் ஆயுதமா டிக்டாக்?

சீனாவில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிக்டாக் செயலி டூயின் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு டிக்டாக் என்ற பெயரில் உலகெங்கும் வெளியிடப்பட்டது.

2019ஆம் ஆண்டி மட்டும் டிக்டாக் செயலி 738 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை, டிக்டாக் தளத்தில் 800 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் இருந்தனர்.

2019 ஆம் ஆண்டு, இந்தியாவில் 323 மில்லியன் முறை டிக்டாக் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிக்டாக் பயனாளர்கள் அதன் செயலியை தினசரி 38 நிமிடங்கள் வரை பயன்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் டிஜிட்டல் சந்தையில் சுமார் 23 விழுக்காடு பைட் டான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், சர்வதேச அளவில் மிக அதிக முதலீட்டை கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமாக பைட் டான்ஸ் உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் சந்தையில் மிக முக்கிய இடத்தில் டிக்டாக் இருந்தாலும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்திய இதற்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் தடையைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இந்தச் செயலிக்கு தடை விதிப்பது குறித்துச் சிந்தித்துவருகிறது. இதனால் தனக்கும் சீனா அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காட்டும் வகையில், சீனாவுக்கு வெளியே தனது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து டிக்டாக் தீவிரமாக சிந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'இயல்புநிலை திரும்ப வாய்பே இல்லை... நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது' - WHO

இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து.

மத்திய அரசு விதித்த இந்தத் தடையை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியானது. மேலும், இதுபோன்ற சீன செயலிகளின் தரவுகளைக் கொண்டு எதிரி நாடுகளை சீனா உளவு பார்ப்பதாகவும் வெளிநாட்டு தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்தியாவின் தடை உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஸ்மார்ட்போன்களிலுள்ள சீன செயலிகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா இதில் சரியான முடிவை எடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

அதிபரின் (ட்ரம்ப்) அறிவிப்பிற்கு முன், இதுகுறித்து நான் எதுவம் கூற விரும்பவில்லை. இருப்பினும், இதுகுறித்து பரிசீலனை செய்துவருகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வதில் உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் மட்டும் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரெலியாவும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் தரவுகள் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் உள்ள சர்வர்களில்தான் சேமிக்கப்படுகிறது என்றும் இதுவரை சீனா அரசு தரவுகளில் குறித்த எவ்வித வேண்டுகோளையும் விடுத்ததில்லை என்று டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால், சீனாவை போன்ற கம்யூனிச தேசத்தில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெறுவது என்பது கடினமான பணி அல்ல என்று துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

TikTok saga
சீனாவின் டிஜிட்டல் ஆயுதமா டிக்டாக்?

சீனாவில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிக்டாக் செயலி டூயின் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு டிக்டாக் என்ற பெயரில் உலகெங்கும் வெளியிடப்பட்டது.

2019ஆம் ஆண்டி மட்டும் டிக்டாக் செயலி 738 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை, டிக்டாக் தளத்தில் 800 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் இருந்தனர்.

2019 ஆம் ஆண்டு, இந்தியாவில் 323 மில்லியன் முறை டிக்டாக் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிக்டாக் பயனாளர்கள் அதன் செயலியை தினசரி 38 நிமிடங்கள் வரை பயன்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் டிஜிட்டல் சந்தையில் சுமார் 23 விழுக்காடு பைட் டான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், சர்வதேச அளவில் மிக அதிக முதலீட்டை கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமாக பைட் டான்ஸ் உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் சந்தையில் மிக முக்கிய இடத்தில் டிக்டாக் இருந்தாலும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்திய இதற்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் தடையைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இந்தச் செயலிக்கு தடை விதிப்பது குறித்துச் சிந்தித்துவருகிறது. இதனால் தனக்கும் சீனா அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை காட்டும் வகையில், சீனாவுக்கு வெளியே தனது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து டிக்டாக் தீவிரமாக சிந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'இயல்புநிலை திரும்ப வாய்பே இல்லை... நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது' - WHO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.