ETV Bharat / international

'இந்தியாவை விமர்சித்த நேபாளப் பிரதமரின் பதவி தப்புமா?' - கட்சி அவசர ஆலோசனை!

author img

By

Published : Jul 5, 2020, 1:44 AM IST

காத்மண்டு: இந்தியாவை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை வலுத்து வருகிறது.

நேபாளம்
நேபாளம்

நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி நீக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.சி.பி எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரதமராக தேர்வு செய்யப்பட்ட கே.பி. சர்மா ஒலி 2018ஆம் ஆண்டில் இருந்து பொறுப்பு வகிக்கிறார்.

அண்மையில் இந்தியாவை விமர்சிக்கும் வகையில், சில கருத்துகளைத் தெரிவித்த ஒலி, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒலியின் இந்த நடவடிக்கை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் சரி, ராஜாங்க ரீதியாகவும் தவறான ஒன்று எனத் தெரிவித்த கட்சியின் நிலைக்குழு, அவரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்திவருவதாக தகலல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கட்சியினரை சமாதானப்படுத்தி நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ஒலி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் நிலைக்குழுவுடன் ஒலி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒலி மீது அதிருப்தி தொடரும்பட்சத்தில் அவர் பதவியில் நீடிப்பது கடினம் என நேபாள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் மலையேறிவிட்டது - சீனாவைச் சீண்டிய பிரதமர் மோடி

நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி நீக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.சி.பி எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரதமராக தேர்வு செய்யப்பட்ட கே.பி. சர்மா ஒலி 2018ஆம் ஆண்டில் இருந்து பொறுப்பு வகிக்கிறார்.

அண்மையில் இந்தியாவை விமர்சிக்கும் வகையில், சில கருத்துகளைத் தெரிவித்த ஒலி, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒலியின் இந்த நடவடிக்கை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் சரி, ராஜாங்க ரீதியாகவும் தவறான ஒன்று எனத் தெரிவித்த கட்சியின் நிலைக்குழு, அவரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்திவருவதாக தகலல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கட்சியினரை சமாதானப்படுத்தி நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ஒலி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் நிலைக்குழுவுடன் ஒலி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒலி மீது அதிருப்தி தொடரும்பட்சத்தில் அவர் பதவியில் நீடிப்பது கடினம் என நேபாள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் மலையேறிவிட்டது - சீனாவைச் சீண்டிய பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.