ஆப்கானிஸ்தானில் மேற்கு காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்று (ஜூலை 12) காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், நான்கு பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிவிபத்து குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆப்கானிஸ்தானில் சமீபத்திய வாரங்களில் வன்முறை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாத தொடக்கத்தில், ஐஎஸ் அமைப்பின் தற்கொலை குண்டுவீச்சுக்காரர்கள் காபூலில் ஒரு மசூதியை தாக்கியதில் பிரார்த்தனை தலைவர் உயிரிழந்தார். மேலும், பலர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.