குடியரசுக் கட்சி வேட்பாளரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், ட்ரம்பின் பிரச்சாரத் தலைமையகத்தில் கூடி, கரகோஷம் எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது தன்னை மீண்டும் அதிபராக்கப் போராடும் கணக்கிலடங்காத ஊழியர்களுக்கு தனது நன்றியை ட்ரம்ப் பதிவு செய்தார்.
தொடர்ந்து, தான் வெற்றிபெறுவது குறித்து உறுதி அளித்த ட்ரம்ப், ”எனினும் இது அரசியல், தற்போது நடப்பது தேர்தல். நம்மால் இதைக் கணிக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.
பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் எடுத்துரைத்தார்.