ETV Bharat / international

10 ஆண்டுகளில் இருபெரும் பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளிய அமெரிக்கா!

author img

By

Published : Oct 28, 2019, 11:58 PM IST

வெறும் பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் தேடப்பட்டுவந்த இருபெரும் பயங்கரவாதிகளை அமெரிக்கச் சிறப்புப் படைகள் கொன்றுள்ளது.

two most dangerous terrorists

செப்டம்பர் 11, 2003 - யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடிய தேதியல்ல. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் அட்டூழியத்தை அனைவரும் உணர்ந்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிவாங்கிய அமெரிக்காவில் புகழ்பெற்ற இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள். பயங்கரவாதத்துக்கு எதிராகவும் ஒசாமா பின்லேடனுக்கு எதிராகவும் அமெரிக்க தொடுத்த போரின் தொடக்கம்தான் இந்த இரட்டை கோபுர தகர்ப்பு.

சுமார் 10 ஆண்டு நீடித்த இந்தப் போர், 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பல ஆண்டாக அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய ஒசாமா பின்லேடனை அமெரிக்கக் கடற்படையின் சீல்ஸ் சிறப்புக் குழுவினர் பாகிஸ்தானுக்கே சென்று சுட்டுத்தள்ளினர். இது அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவின் செல்வாக்கைப் பலமடங்கு உயர்த்தியது. 2008ஆம் ஆண்டின் கடும் பொருளாதார மந்தநிலையையும் தாண்டி ஒபாமா இரண்டாம் முறை ஆட்சி பீடத்தில் அமர காரணமாகவும் அமைந்தது.

Twin tower attack
இரட்டை கோபுர தகர்ப்பு

பயங்கரவாதம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் ஐஎஸ் அமைப்பும் அதன் தலைவன் அபுபக்கரும் அசுர வேகத்தில் மக்களை அழித்து வந்தார்கள். பல ஆண்டு நீடித்த அந்தப் போராட்டத்தையும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

கடந்த வாரம் சிரியாவில் அமெரிக்கச் சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் அபுபக்கர் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் கை மீண்டும் ஓங்கும் என்பது போன்ற ஆருடங்கள் பரவத்தொடங்கியுள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபருக்குக் கிடைத்த வரவேற்பு இந்நாள் அமெரிக்க அதிபருக்குக் கிடைக்கவில்லை. நேற்று மாலை புகழ்பெற்ற வேல்ட் சீரிஸ் பேஸ்பால் போட்டியைக் காணச் சென்ற அமெரிக்க அதிபரை மக்கள் கேலி செய்ததே இதற்குச் சாட்சி.

ட்ரம்பை கேலி செய்த பேஸ்பால் ரசிகர்கள்

ஆனாலும், தேர்தல் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே அடுத்தாண்டு அதிபர் ட்ரம்ப்பின் விதி என்ன என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்.

செப்டம்பர் 11, 2003 - யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடிய தேதியல்ல. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் அட்டூழியத்தை அனைவரும் உணர்ந்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிவாங்கிய அமெரிக்காவில் புகழ்பெற்ற இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள். பயங்கரவாதத்துக்கு எதிராகவும் ஒசாமா பின்லேடனுக்கு எதிராகவும் அமெரிக்க தொடுத்த போரின் தொடக்கம்தான் இந்த இரட்டை கோபுர தகர்ப்பு.

சுமார் 10 ஆண்டு நீடித்த இந்தப் போர், 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பல ஆண்டாக அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய ஒசாமா பின்லேடனை அமெரிக்கக் கடற்படையின் சீல்ஸ் சிறப்புக் குழுவினர் பாகிஸ்தானுக்கே சென்று சுட்டுத்தள்ளினர். இது அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவின் செல்வாக்கைப் பலமடங்கு உயர்த்தியது. 2008ஆம் ஆண்டின் கடும் பொருளாதார மந்தநிலையையும் தாண்டி ஒபாமா இரண்டாம் முறை ஆட்சி பீடத்தில் அமர காரணமாகவும் அமைந்தது.

Twin tower attack
இரட்டை கோபுர தகர்ப்பு

பயங்கரவாதம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் ஐஎஸ் அமைப்பும் அதன் தலைவன் அபுபக்கரும் அசுர வேகத்தில் மக்களை அழித்து வந்தார்கள். பல ஆண்டு நீடித்த அந்தப் போராட்டத்தையும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

கடந்த வாரம் சிரியாவில் அமெரிக்கச் சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் அபுபக்கர் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் கை மீண்டும் ஓங்கும் என்பது போன்ற ஆருடங்கள் பரவத்தொடங்கியுள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபருக்குக் கிடைத்த வரவேற்பு இந்நாள் அமெரிக்க அதிபருக்குக் கிடைக்கவில்லை. நேற்று மாலை புகழ்பெற்ற வேல்ட் சீரிஸ் பேஸ்பால் போட்டியைக் காணச் சென்ற அமெரிக்க அதிபரை மக்கள் கேலி செய்ததே இதற்குச் சாட்சி.

ட்ரம்பை கேலி செய்த பேஸ்பால் ரசிகர்கள்

ஆனாலும், தேர்தல் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே அடுத்தாண்டு அதிபர் ட்ரம்ப்பின் விதி என்ன என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.