ETV Bharat / international

சந்தேகத்துக்குரிய நபரின் வீட்டில் பிடிபட்ட ரூ.35 கோடி மதிப்பிலான நாஜி நினைவுச் சின்னங்கள்!

author img

By

Published : Oct 8, 2021, 1:22 PM IST

பிரேசிலில் பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டுவந்த நபர் ஒருவர், ஹிட்லரின் நாஜிப் படை குறித்த நினைவுச்சின்னங்களை தன் வீடு முழுவதும் சேகரித்துவைத்திருந்தது காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹிட்லர்
ஹிட்லர்

ரியோ டி ஜெனிரோ (பிரேசில்): பாலியல் புகார்களின்பேரில் தேடப்பட்டுவந்த நபரின் வீட்டில், பழங்கால அசல் நாஜி சீருடைகள், பதக்கங்கள், ஆயுதங்கள், பிரேம் செய்து பொருத்தப்பட்டிருந்த ஹிட்லரின் புகைப்படங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத அந்நபர் மீது அவரது அண்டை வீட்டினரிடமிருந்து பல்வேறு பாலியல் புகார்கள் வந்த நிலையில், காவல் துறையினர் அந்நபரை கடந்த சில நாள்களாகக் கண்காணித்துவந்துள்ளனர். இந்நிலையில், தேடுதல் உத்தரவைப் பெற்று அந்நபரின் வீட்டில் நுழைந்து கைதுசெய்ய முயன்றபோது இப்பொருள்களைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.

சந்தேகத்துக்குரிய நபரின் வீட்டில் பிடிபட்ட 35 கோடி மதிப்பிலான நாஜி நினைவுச் சின்னங்கள்!

சந்தேகத்துக்குரிய அந்நபர் இன்னும் பிடிபடாத நிலையில், சட்டவிரோத ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருத்தல், சிறார் பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், அவர் சேகரித்துவைத்துள்ள நாஜிப் படை தொடர்பான பொருள்கள் 34.67 கோடி (நான்கு மில்லியன் யூரோக்கள்) ரூபாய் மதிப்பு கொண்டவை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: தடுப்பூசி விவகாரத்தில் மனம் மாறிய பிரிட்டன் அரசு

ரியோ டி ஜெனிரோ (பிரேசில்): பாலியல் புகார்களின்பேரில் தேடப்பட்டுவந்த நபரின் வீட்டில், பழங்கால அசல் நாஜி சீருடைகள், பதக்கங்கள், ஆயுதங்கள், பிரேம் செய்து பொருத்தப்பட்டிருந்த ஹிட்லரின் புகைப்படங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத அந்நபர் மீது அவரது அண்டை வீட்டினரிடமிருந்து பல்வேறு பாலியல் புகார்கள் வந்த நிலையில், காவல் துறையினர் அந்நபரை கடந்த சில நாள்களாகக் கண்காணித்துவந்துள்ளனர். இந்நிலையில், தேடுதல் உத்தரவைப் பெற்று அந்நபரின் வீட்டில் நுழைந்து கைதுசெய்ய முயன்றபோது இப்பொருள்களைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.

சந்தேகத்துக்குரிய நபரின் வீட்டில் பிடிபட்ட 35 கோடி மதிப்பிலான நாஜி நினைவுச் சின்னங்கள்!

சந்தேகத்துக்குரிய அந்நபர் இன்னும் பிடிபடாத நிலையில், சட்டவிரோத ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருத்தல், சிறார் பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், அவர் சேகரித்துவைத்துள்ள நாஜிப் படை தொடர்பான பொருள்கள் 34.67 கோடி (நான்கு மில்லியன் யூரோக்கள்) ரூபாய் மதிப்பு கொண்டவை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: தடுப்பூசி விவகாரத்தில் மனம் மாறிய பிரிட்டன் அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.