ETV Bharat / city

பேனர்களை கழற்றிய அலுவலர்கள்.. கழற்றவிடாமல் கத்திய தேமுதிகவினர்

author img

By

Published : Sep 14, 2019, 7:09 PM IST

திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த தேமுதிக கொடி கம்பங்களையும் பேனர்களையும் அப்புறப்படுத்திய மாநகராட்சி அலுவலர்களுடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூக்கி வீசப்பட்ட தேமுதிக கட்சியின் பேனர்கள்

சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

அகற்றப்பட்ட பேனர்கள்

இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை வரவேற்கும் விதமாக திருப்பூர் - காங்கேயம் சாலையில் தேமுதிக சார்பில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்களும், கொடி கம்பங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்த தேமுதிக கட்சி பேனர்களையும், கொடி கம்பங்களையும், அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது , சம்பவ இடத்திற்கு வந்த தேமுதிகவினர் , பேனர்களையும், கம்பங்களையும் அகற்றக்கூடாது என மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

அகற்றப்பட்ட பேனர்கள்

இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை வரவேற்கும் விதமாக திருப்பூர் - காங்கேயம் சாலையில் தேமுதிக சார்பில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்களும், கொடி கம்பங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்த தேமுதிக கட்சி பேனர்களையும், கொடி கம்பங்களையும், அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது , சம்பவ இடத்திற்கு வந்த தேமுதிகவினர் , பேனர்களையும், கம்பங்களையும் அகற்றக்கூடாது என மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திருப்பூரில், பொதுமக்கள் மற்றும் வாகனஒட்டிகளுக்கு இடையூறாக கட்டப்பட்ட தேமுதிக கொடி கம்பங்களை அப்புறப்படுத்திய அதிகாரிகளுடன் தேமுதிகவினர் வாக்குவாதம் !!

Body:சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுபாடுகளை அறிவித்திருந்த நிலையில், கட்சி தலைவர்களும் பொது மக்களுக்கு இடையூராக பேனர்கள், கொடிகளை வைக்க கூடாது என தங்கள் கட்சியினருக்கு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் , திருப்பூர் காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இதணையடுத்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் , பிரேமலதா, ஆகியோரை வரவேற்க்கும்விதமாக, திருப்பூர் -- காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் பொது மக்களுக்கு இடையூராக பிளக்ஸ் பேனர்களும், கொடி கம்பங்களும் அமைக்கப்பட்டிருந்தது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் , பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக இருந்த தேமுதிக கட்சி பேனர்களையும், கொடி கம்பங்களையும், அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது , சம்பவ இடத்திற்க்கு வந்த தேமுதிக வினர் , பேனர்களையும், கம்பங்களையும் அகற்ற கூடாது என மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.