ETV Bharat / city

ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் ஓட்டம்...! போலீஸ் வலை

author img

By

Published : Oct 24, 2019, 3:01 AM IST

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே ஆசிரியையை கத்தியால் குத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயற்சித்த 11ஆம் வகுப்பு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Kanyakumari, student allegedly stabbed Teacher

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் வருவது வழக்கம். இவர் களியல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜெனிஷ், டியூசன் ஆசிரியை மெர்லின் ஷானி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மெர்லின் ஷானியிடம், மாணவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டதால், மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மெர்லின் ஷானி உடலின் பல பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷானியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வீட்டருகில் உள்ள டியூசன் ஆசிரியையை பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதோடு கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாணவன் ஜெனிஸ் தலைமறைவாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியையின் தாயார் பேட்டி
இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு புகார்: ஆட்டோ ஓட்டுநரின் நண்பனுக்கு சிறை!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் வருவது வழக்கம். இவர் களியல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜெனிஷ், டியூசன் ஆசிரியை மெர்லின் ஷானி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மெர்லின் ஷானியிடம், மாணவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டதால், மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மெர்லின் ஷானி உடலின் பல பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷானியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வீட்டருகில் உள்ள டியூசன் ஆசிரியையை பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதோடு கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாணவன் ஜெனிஸ் தலைமறைவாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியையின் தாயார் பேட்டி
இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு புகார்: ஆட்டோ ஓட்டுநரின் நண்பனுக்கு சிறை!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை யையை பலாத்காரம் செய்ய முயற்சி. தடுக்க நினைத்தவரை சரமாரியாக கத்தியால் குத்திய 11 ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல். தலைமறைவான மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Body:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி(25). பி.எட்., படித்து முடித்த இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார். மேலும் தனது வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் வருவது வழக்கம். இவர் களியல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை ஜெனிஷ், டியூசன் ஆசிரியை மெர்லின் ஷானி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மெர்லின் ஷானி மாணவரிடம் பள்ளிக்கூடம் சொல்லவில்லையா என்று கேட்டு கொண்டிருந்தபோது, திடீரென மாணவன் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதால் மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மெர்லின் ஷானி உடலில் பல பகுதிகளிலும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷானி யை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சுயநினைவின்றி அடிவயிறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கத்திக்குத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் நாகர்கோவில், ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வீட்டருகில் உள்ள டியூசன் ஆசிரியையை பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதோடு கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ய முயற்ச்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாணவன் ஜெனிஸ் தலைமறைவாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மாணவனையும் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.