ETV Bharat / city

குறுங்காடுகள் ஆகும் ஊருணி கரைகள் - ஊரக வளர்ச்சித்துறை அசத்தல் - மதுரையில் ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்களால் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கம்

மதுரை: செல்லம்பட்டி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில்  மியாவாக்கி முறையிலான குறுங்காடுகள் உருவாக்கும் முயற்சியில் அப்பகுதியின் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்து அசத்தும் ஊராட்சி
மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்து அசத்தும் ஊராட்சி
author img

By

Published : Dec 1, 2019, 11:42 AM IST

Updated : Dec 1, 2019, 6:53 PM IST

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செல்லம்பட்டி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் மியாவாக்கி முறையிலான குறுங்காடுகள் உருவாக்கும் முயற்சியில் அப்பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக செக்காணூரணி அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தின் ஊருணிக் கரைகளில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

நடவு செய்யக்கூடிய கன்றுகளுக்கு ஏற்றவாறு குழிகள் வெட்டப்பட்டு, அதில் மட்கிய இலை, தழைகள் போடப்படுகின்றன. பிறகு ஆடு, மாடு ஆகியவற்றின் சாணங்கள் கொட்டி நிரப்பப்படுகின்றன. இவை அனைத்தும் அந்தக் குழிகளுக்குள்ளே உரமாக்கப்படுகின்றன.

பிறகு புன்னை, ஆல், அரசு, கொன்றை, வாகை, கொய்யா, மா, நாவல் உள்ளிட்ட மரங்களோடு பூக்கும் மரங்கள் என கலந்து மியாவாக்கி முறையில் நடுகின்றனர். இரண்டடி இடைவெளியில் நடப்படும் இந்த மரங்கள் மிக அடர்த்தியாக வளர்கின்றன. உள்ளூர் மக்களையே இதனை நட்டுப் பராமரிக்கும் பணிக்கும் தயார்ப்படுத்துகின்றனர்.

மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்து அசத்தும் ஊராட்சி

இது குறித்து கருமாத்தூர் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயலட்சுமி கூறுகையில், 'ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 கன்றுகள் வரை நடுவதுடன், அதற்குத் தேவையான ஊட்டத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதிகாரிகளுக்கு கோட்டையூர் மற்றும் மொட்டைநாயக்கன் பட்டி பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்' என்றார்.

இதையும் படிங்க:

கண்மாய்க்குள் குறுங்காடு வளர்ப்பு! - அசத்தும் இளைஞர்கள் அமைப்பு!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செல்லம்பட்டி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் மியாவாக்கி முறையிலான குறுங்காடுகள் உருவாக்கும் முயற்சியில் அப்பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக செக்காணூரணி அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தின் ஊருணிக் கரைகளில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

நடவு செய்யக்கூடிய கன்றுகளுக்கு ஏற்றவாறு குழிகள் வெட்டப்பட்டு, அதில் மட்கிய இலை, தழைகள் போடப்படுகின்றன. பிறகு ஆடு, மாடு ஆகியவற்றின் சாணங்கள் கொட்டி நிரப்பப்படுகின்றன. இவை அனைத்தும் அந்தக் குழிகளுக்குள்ளே உரமாக்கப்படுகின்றன.

பிறகு புன்னை, ஆல், அரசு, கொன்றை, வாகை, கொய்யா, மா, நாவல் உள்ளிட்ட மரங்களோடு பூக்கும் மரங்கள் என கலந்து மியாவாக்கி முறையில் நடுகின்றனர். இரண்டடி இடைவெளியில் நடப்படும் இந்த மரங்கள் மிக அடர்த்தியாக வளர்கின்றன. உள்ளூர் மக்களையே இதனை நட்டுப் பராமரிக்கும் பணிக்கும் தயார்ப்படுத்துகின்றனர்.

மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்து அசத்தும் ஊராட்சி

இது குறித்து கருமாத்தூர் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயலட்சுமி கூறுகையில், 'ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 கன்றுகள் வரை நடுவதுடன், அதற்குத் தேவையான ஊட்டத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதிகாரிகளுக்கு கோட்டையூர் மற்றும் மொட்டைநாயக்கன் பட்டி பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்' என்றார்.

இதையும் படிங்க:

கண்மாய்க்குள் குறுங்காடு வளர்ப்பு! - அசத்தும் இளைஞர்கள் அமைப்பு!

Intro:மியாவாக்கி முறையில் காடுகள்; சூழல் காக்கும் முயற்சியில் ஆர்வலர்கள் - அசத்தும் ஊரக வளர்ச்சித்துறை

மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் உருவாக்கும் ஆர்வலர்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கிறது மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை. அடர்வனங்கள் உருவாக்கி, பல்லுயிரிப் பெருக்கத்திற்கு வழிகோலுவதே எங்கள் நோக்கம் எனும் முனைப்பில் செயல்படும் ஆர்வலர்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு.
Body:மியாவாக்கி முறையில் காடுகள்; சூழல் காக்கும் முயற்சியில் ஆர்வலர்கள் - அசத்தும் ஊரக வளர்ச்சித்துறை

மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் உருவாக்கும் ஆர்வலர்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கிறது மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை. அடர்வனங்கள் உருவாக்கி, பல்லுயிரிப் பெருக்கத்திற்கு வழிகோலுவதே எங்கள் நோக்கம் எனும் முனைப்பில் செயல்படும் ஆர்வலர்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு.

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு என பல்வேறு வகையிலும் என சுற்றுச்சூழல் கேடு நிகழ்ந்து வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளெல்லாம் அதற்கேற்ப செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் நெகிழி ஒழிப்பும், காடுகள் உருவாக்கமும்...

அதனை அடிப்படையாகக் கொண்டு மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செல்லம்பட்டி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் மியாவாக்கி முறையிலான குறுங்காடுகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக செக்காணூரணி அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தின் ஊருணிக் கரைகளில் இன்று 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதுகுறித்து செல்லம்பட்டி ஒன்றியத்தின் ஓவர்சீயர் முகமது தாஹா கூறுகையில், 'தமிழக அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுள் குறுங்காடுகள் உருவாக்கமும் ஒன்று. மதுரை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் மற்றும் செயற்பொறியாளரின் ஊக்கம்தான் இதற்குக் காரணம். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இதற்கான பணிகள் மக்களால் செயல்படுத்தப்படுகிறது.

தற்போதைய சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஆக்ஸிஜன் எனப்படும் உயிர்க்காற்று பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்வது மட்டுமன்றி, பெருவாரியான மரங்களை நட்டு வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். அதற்கு மியாவாக்கி முறை அடர்வன உருவாக்கம் பெரிதும் பயன்படும்' என்றார்.

புன்னை, ஆல், அரசு, கொன்றை, வாகை, கொய்யா, மா, நாவல் உள்ளிட்ட மரங்களோடு பூக்கும் மரங்கள் என கலந்து மியாவாக்கி முறையில் நடுகின்றனர். இரண்டடி இடைவெளியில் நடப்படும் இந்த மரங்கள் மிக அடர்த்தியாக வளர்கின்றன. உள்ளூர் மக்களையே இதனை நட்டுப் பராமரிக்கும் பணிக்கும் தயார்ப்படுத்துகின்றனர்.

கருமாத்தூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயலட்சுமி கூறுகையில், 'ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 கன்றுகள் வரை நடுவதுடன், அதற்குத் தேவையான ஊட்டத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதிகாரிகளுக்கு கோட்டையூர் மற்றும் மொட்டைநாயக்கன் பட்டி பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்' என்றார்.

இம்மியாவாக்கி முறை அடர்வனக் காடுகள் மிகப் பயனுள்ளது என உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுற்றுச்சூழலை மேம்படுத்த செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், குறுகிய நிலப்பரப்பில் அடர்காடுகள் உருவாவது பல்லுயிர்ச்சூழலுக்கு உகந்தது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் துரை விஜய பாண்டியன்.

மேலும் அவர், 'குறைவான நீரைக் கொண்டு அதிகமான மரக்கன்றுகளை வளர்த்தெடுப்பதற்கு மியாவாக்கி முறை சிறந்ததாகும். சராசரியாக ஒரு மரம் ஆண்டொன்றிற்கு பத்தடி உயரம் வளர்கிறதென்றால், இந்த முறையின் மூலம் 30 அடி உயரம் வளரும். இக்குறுங்காடுகளில் அனைத்துவிதமான உயிரினங்களும் வந்து வாழ்வதற்கான சூழல் உருவாகிறது.

பறவைகளின் பெருக்கம் காரணமாக காடுகள், மரங்கள், தாவரங்கள் பெருகுவதற்கான இயல்பான சூழல் உருவாவதற்கு மியாவாக்கி முறை பேருதவி புரிகிறது. சுத்தமான, இயற்கையான காற்று கிடைப்பதே அரிதாகி வருகிறது' என்கிறார்.

நடவு செய்யக்கூடிய கன்றுகளுக்கு ஏற்றவாறு குழிகள் வெட்டப்பட்டு, அதில் மட்கிய இலை, தழைகள் போடப்படுகின்றன. பிறகு ஆடு, மாடு ஆகியவற்றின் சாணங்கள் கொட்டி நிரப்பப்படுகின்றன. இவை அனைத்தும் அந்தக் குழிகளுக்குள்ளே உரமாக்கப்படுகின்றன. பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாக தண்ணீர் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

எத்தனை சதுர அடி நிலமென்றாலும் அதற்குள் அடர்வனம் உருவாக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், மழைத் தண்ணீரைப் பிடித்து நிலத்திற்குள் சேமிக்கும் ஆற்றலை அடர்வனங்கள் பெறுகின்றன என்கிறார் தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளையின் நிறுவனர் சி.பி.ரவி.

அவர் மேலும், 'மியாவாக்கி முறையில் நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மிக விரைவாக வளர்கின்றன. அதனுடைய இயல்பான வளர்ச்சியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். இந்த மரங்களில் உள்ள பழங்கள், பூக்கள் ஆகியவற்றைத் தேடி வரும் பறவைகள், தேனீக்கள் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாய் மாறுகின்றன.

அடர்வனம் உள்ள பகுதியைச் சுற்றி நடைபெறும் விவசாயப் பணிகளில் தேனீக்களின் பெருக்கம் அயல்மகரந்த சேர்க்கைக்கு வாய்ப்பளிக்கிறது. நடப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே அப்பகுதி அடர்ந்த சோலையாக மாறிவிடும். இந்த முறையை அனைவரும் கடைப்பிடித்து தமிழகத்தையே சோலையாக மாற்ற வேண்டும்' என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மதுரை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள இச்சோதனை முறை செயல்பாடு, சூழல் மேம்பாட்டிற்கு பெரும் துணை புரியும். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்று ஒரு பங்கு காடுகள் இருப்பது அவசியம் என வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலோ அது 25 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், இதுபோன்ற மியாவாக்கி அடர்வனங்கள் மிக மிக அவசியமானவையே.Conclusion:
Last Updated : Dec 1, 2019, 6:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.