ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேலம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வரிசையில் நின்று வாக்காளித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கருப்பணன், "தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதால் 90 விழுக்காடு அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இதற்காக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாண்டுகள் தேர்தல் தள்ளிப்போனதற்கு திமுக தான் காரணம். ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். ஸ்டாலின் மக்கள் மத்தியில் அதிமுக அரசை பற்றி குறை சொல்வதை விட்டு தன் கட்சி வளர்ப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும் . 2021சட்டப்பேரவைத் தேர்தலிலும் பழனிசாமி தான் முதலமைச்சர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!