ETV Bharat / city

பிரசவத்தின்போது யானை குட்டியுடன் இறந்த சோகம் - சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 20 வயதுள்ள காட்டு யானை குட்டியுடன் பலி

சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 20 வயதுள்ள காட்டு யானை ஒன்று குட்டியை ஈன்றெடுக்கும்போது ஏற்பட்ட பிரசவ வலியினால் குட்டியுடன் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை உயிரிழப்பு
யானை உயிரிழப்பு
author img

By

Published : Apr 26, 2022, 4:54 PM IST

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப்பகுதி இரட்டைக்கண் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.

குட்டியுடன் யானை உயிரிழந்த சோகம்
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து குட்டியுடன் யானை இறந்தது குறித்து இன்று (ஏப்.26) விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க யானை குட்டியை ஈன்றெடுக்கும்போது, ஏற்பட்ட பிரசவ வலியின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும்; இறந்து இரு நாட்கள் இருக்கலாம் என்றும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... உண்மை காரணத்தை மறைக்க முயற்சிக்கிறதா வனத்துறை?

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப்பகுதி இரட்டைக்கண் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.

குட்டியுடன் யானை உயிரிழந்த சோகம்
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து குட்டியுடன் யானை இறந்தது குறித்து இன்று (ஏப்.26) விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க யானை குட்டியை ஈன்றெடுக்கும்போது, ஏற்பட்ட பிரசவ வலியின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும்; இறந்து இரு நாட்கள் இருக்கலாம் என்றும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... உண்மை காரணத்தை மறைக்க முயற்சிக்கிறதா வனத்துறை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.