ETV Bharat / city

‘தமிழ்நாடு கல்வி பெலோஷிப் திட்டம்’அறிமுகம்- இளைஞர்களுக்கு பள்ளி கல்வி துறை அழைப்பு.

author img

By

Published : Apr 23, 2022, 1:16 PM IST

அரசு பள்ளிகளின் தரம் மேம்பட ‘தமிழ்நாடு கல்வி பெலோஷிப்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது. இத்திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு கல்வி பெலோஷிப் திட்டம்’அறிமுகம்- இளைஞர்களுக்கு பள்ளி கல்வி துறை அழைப்பு.
‘தமிழ்நாடு கல்வி பெலோஷிப் திட்டம்’அறிமுகம்- இளைஞர்களுக்கு பள்ளி கல்வி துறை அழைப்பு.

சென்னை: அரசு பள்ளிகளின் தரம் மேம்பட “தமிழ்நாடு கல்வி பெலோஷிப்” என்ற புதிய திட்டத்தை பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

பல்லேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ‘தமிழ்நாடு முதலமைச்சரின் fellowship’என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ‘தமிழ்நாடு fellowship கல்வி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் , நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் தமிழ்நாடு கல்வி பொலோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு ஒரு senior fellow என்கிற பணியிடத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் 45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்களும். fellows என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடத்தில் 114 நபர்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் fellows பணியிடத்தில் மாதம்தோறும் 32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக்கப்படவுள்ளனர்.

இத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15வரை விண்ணப்பிக்கலாம். பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக்காலம் முழுவதும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும்.

இதையும் படிங்க:1,275 கல்லூரி விடுதிகளில் ரூ. 2 கோடி செலவில் இணையவழி நூலகம்

சென்னை: அரசு பள்ளிகளின் தரம் மேம்பட “தமிழ்நாடு கல்வி பெலோஷிப்” என்ற புதிய திட்டத்தை பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

பல்லேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ‘தமிழ்நாடு முதலமைச்சரின் fellowship’என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ‘தமிழ்நாடு fellowship கல்வி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் , நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் தமிழ்நாடு கல்வி பொலோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு ஒரு senior fellow என்கிற பணியிடத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் 45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்களும். fellows என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடத்தில் 114 நபர்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் fellows பணியிடத்தில் மாதம்தோறும் 32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக்கப்படவுள்ளனர்.

இத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15வரை விண்ணப்பிக்கலாம். பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக்காலம் முழுவதும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும்.

இதையும் படிங்க:1,275 கல்லூரி விடுதிகளில் ரூ. 2 கோடி செலவில் இணையவழி நூலகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.