ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 2,296 பேருக்கு கரோனா!

author img

By

Published : Feb 13, 2022, 8:03 PM IST

தமிழ்நாட்டில் இன்று (பிப்ரவரி 13) ஒரே நாளில் 2,296 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2296 நபர்களுக்கு புதிதாக கரோனா
2296 நபர்களுக்கு புதிதாக கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2,296 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்ததால் சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 699 எனக் குறைந்துள்ளது என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 173 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் மேலும் 2,296 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 568 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 36 ஆயிரத்து 262 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 41 ஆயிரத்து 699 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகள் குணமடைந்த 8,229 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 56 ஆயிரத்து 648 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் நான்கு நோயாளிகளும் அரசு மருத்துமனையில் ஏழு நோயாளிகளும் என 11 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 915 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 461 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 432 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 208 நபர்களுக்கும், ஈரோட்டில் 134 நபர்களுக்கும், சேலத்தில் 109 நபர்களுக்கும் திருப்பூரில் 113 நபர்களுக்கும் புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 2.7 எனக் குறைந்துள்ளது. மாநில அளவில் கோயம்புத்தூரில் புதிய பாதிப்பு 6.2 என அதிகளவில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் மிகக் குறைந்த அளவாக 0.5 என்ற வீதத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பணக்காரர்களின் வீடு ஏழைகளுக்குத் திறக்காது; அங்குச் சென்று அமரவும் முடியாது' - ஜோதிமணி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2,296 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்ததால் சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 699 எனக் குறைந்துள்ளது என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 173 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் மேலும் 2,296 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 568 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 36 ஆயிரத்து 262 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 41 ஆயிரத்து 699 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகள் குணமடைந்த 8,229 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 56 ஆயிரத்து 648 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் நான்கு நோயாளிகளும் அரசு மருத்துமனையில் ஏழு நோயாளிகளும் என 11 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 915 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 461 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 432 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 208 நபர்களுக்கும், ஈரோட்டில் 134 நபர்களுக்கும், சேலத்தில் 109 நபர்களுக்கும் திருப்பூரில் 113 நபர்களுக்கும் புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 2.7 எனக் குறைந்துள்ளது. மாநில அளவில் கோயம்புத்தூரில் புதிய பாதிப்பு 6.2 என அதிகளவில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் மிகக் குறைந்த அளவாக 0.5 என்ற வீதத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பணக்காரர்களின் வீடு ஏழைகளுக்குத் திறக்காது; அங்குச் சென்று அமரவும் முடியாது' - ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.