ETV Bharat / city

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

author img

By

Published : Jun 13, 2022, 3:28 PM IST

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதில், தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதனை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் மேற்கொள்ளக்கூடாது என்றும் இது தொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி துறைக்கு வழங்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

"மேலும் உச்ச நீதிமன்றத்தால் பிரச்சினைகளை விசாரித்து முடிவெடுக்கும் வரை, மேகதாது திட்டம் பற்றிய விவாதம் கடந்த ஜூன் 17, 2021 அன்று உங்களுக்கு அளிக்கப்பட்ட குறிப்பாணையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் நீர்த்தேக்கம் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எந்த ஒப்புதலையும் வழங்க வேண்டாம் என்று ஜல் சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். மேலும், 2022 மார்ச் 21 அன்று நமது மாநில சட்டப் பேரவையின் ஒருமனதாகத் தீர்மானம் கொண்டு, திட்டத்தை எதிர்த்தும், கர்நாடக அரசின் ரூ.1,000 கோடியை ஒதுக்கியதற்கும் மத்திய ஜல் சக்தி அமைச்சருக்குப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன" என்று கடிதத்தில் விளக்கியுள்ளார். இவற்றையும் மீறி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) 2022 ஜூன் 17 அன்று நடைபெறும் 16வது கூட்டத்தில் மேகதாது திட்டத்தின் அறிக்கை (டிபிஆர்) குறித்து விவாதிக்க முன்வந்துள்ளது.

"இந்த முடிவு தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் வேதனை அளிக்கிறது. தமிழகம் அதன் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்கும் காவிரி நீரையே பெரிதும் நம்பியுள்ளது என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 அன்று காவிரி நதி நீரை நதிக்கரையோர மாநிலங்களுக்குப் பங்கிட்டுத் தீர்ப்பளித்தது. ஒதுக்கீட்டின் அளவு எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும், ஒதுக்கப்பட்ட பங்கின் மூலம் எங்கள் தேவைகளை நாங்கள் நிர்வகித்து வருகிறோம்" என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டுமே கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் அதற்கு அப்பால் அத்தகைய நடவடிக்கையை கருத்தில் கொள்ள அதை விரிவாக்க முடியாது என தெரிவித்த அவர் இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகவும், தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதால் சட்டப்படி ஏற்க முடியாது என கூறியுள்ளார். இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே தெளிவுபடுத்தப்படும். எனவே, எங்களின் விண்ணப்பங்களை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்பே, அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட இந்தப் பிரச்சினையை அவசர அவசரமாக விவாதிக்க காவேரி மேலாண்மை வாரியம் எடுத்த முடிவு, நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சி என்று அஞ்சுகிறோம்.

எனவே , உச்ச நீதிமன்றத்தால் மேகதாது திட்டம் குறித்து எந்த விவாதத்தையும் நடத்தாமல் இருக்குமாறு காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவருக்கு ஆலோசனை வழங்குமாறு ஜல் சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடுக - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதில், தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதனை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் மேற்கொள்ளக்கூடாது என்றும் இது தொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி துறைக்கு வழங்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

"மேலும் உச்ச நீதிமன்றத்தால் பிரச்சினைகளை விசாரித்து முடிவெடுக்கும் வரை, மேகதாது திட்டம் பற்றிய விவாதம் கடந்த ஜூன் 17, 2021 அன்று உங்களுக்கு அளிக்கப்பட்ட குறிப்பாணையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் நீர்த்தேக்கம் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எந்த ஒப்புதலையும் வழங்க வேண்டாம் என்று ஜல் சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். மேலும், 2022 மார்ச் 21 அன்று நமது மாநில சட்டப் பேரவையின் ஒருமனதாகத் தீர்மானம் கொண்டு, திட்டத்தை எதிர்த்தும், கர்நாடக அரசின் ரூ.1,000 கோடியை ஒதுக்கியதற்கும் மத்திய ஜல் சக்தி அமைச்சருக்குப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன" என்று கடிதத்தில் விளக்கியுள்ளார். இவற்றையும் மீறி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) 2022 ஜூன் 17 அன்று நடைபெறும் 16வது கூட்டத்தில் மேகதாது திட்டத்தின் அறிக்கை (டிபிஆர்) குறித்து விவாதிக்க முன்வந்துள்ளது.

"இந்த முடிவு தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் வேதனை அளிக்கிறது. தமிழகம் அதன் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்கும் காவிரி நீரையே பெரிதும் நம்பியுள்ளது என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 அன்று காவிரி நதி நீரை நதிக்கரையோர மாநிலங்களுக்குப் பங்கிட்டுத் தீர்ப்பளித்தது. ஒதுக்கீட்டின் அளவு எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும், ஒதுக்கப்பட்ட பங்கின் மூலம் எங்கள் தேவைகளை நாங்கள் நிர்வகித்து வருகிறோம்" என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டுமே கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் அதற்கு அப்பால் அத்தகைய நடவடிக்கையை கருத்தில் கொள்ள அதை விரிவாக்க முடியாது என தெரிவித்த அவர் இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகவும், தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதால் சட்டப்படி ஏற்க முடியாது என கூறியுள்ளார். இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே தெளிவுபடுத்தப்படும். எனவே, எங்களின் விண்ணப்பங்களை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்பே, அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட இந்தப் பிரச்சினையை அவசர அவசரமாக விவாதிக்க காவேரி மேலாண்மை வாரியம் எடுத்த முடிவு, நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சி என்று அஞ்சுகிறோம்.

எனவே , உச்ச நீதிமன்றத்தால் மேகதாது திட்டம் குறித்து எந்த விவாதத்தையும் நடத்தாமல் இருக்குமாறு காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவருக்கு ஆலோசனை வழங்குமாறு ஜல் சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடுக - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.