ETV Bharat / city

பதிவுத்துறை மென்பொருளில் புதிய அப்டேட்

author img

By

Published : Sep 3, 2022, 5:01 PM IST

பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக துறையின் சார்பாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருளில் புதிய அப்டேட் வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவுத்துறை மென்பொருளில் புதிய அப்டேட்
பதிவுத்துறை மென்பொருளில் புதிய அப்டேட்

சென்னை: பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக துறையின் சார்பாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருளில் கீழ்க்கண்ட புதிய அலகுகள் உருவாக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

1. ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் கண்டு, ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தவிர்த்தல்.

2. வில்லங்கச்சான்றில் திருத்தம் மேற்கொள்ள இணையவழி விண்ணப்பித்தல்.

3. கிறிஸ்தவ திருமண வடிப்புகளை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையவழியிலோ விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுதல், ஒருங்கிணைந்த தணிக்கை அலகு, முதியவர்களுக்கு ஆவணப்பதிவில் முன்னுரிமை.

4. ஆவணங்களைப்பதிவு செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு, சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர், முன்பதிவு செய்த அதே வரிசையில் வரிசைக்கிரமமாக, எந்தவிதமான பாகுபாடுமின்றி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5. பொதுவாக பொதுமக்கள் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே பதிவுக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்கின்றனர். மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி, ஒரே சமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கமாக உள்ளது.

அவ்வாறு ஒரே சமயத்தில் அனைத்து அலுவலகங்களிலும் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும்போது நெட்வொர்க்கில் அதிக நெரிசல் ஏற்பட்டு, மென்பொருளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக சொத்து குறித்த வில்லங்க விவரங்களைப் பதிவுத்துறையின் வலைதளத்திலிருந்து இணையவழியாக இலவசமாகப் பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியினைப் பயன்படுத்தி, சில கைப்பேசி செயலிகள் வில்லங்கச் சான்றுகளை தரவிறக்கம்செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இதனால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னையை நிவர்த்தி செய்து மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றன. தன்னிச்சையாக பதிவுத்துறை வலைதளத்தில் டேக் செய்யப்பட்டிருந்த அந்த கைப்பேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் பிரச்னை சீராக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறையின் யு.ஆர்.எல் எனப்படும் இணைய முகவரியினை குறியாக்கம் செய்தல், இரண்டு நொடிகளுக்கு மேல் காலமெடுக்கும் மித வேக தரவு தள வினவுகளை மாற்றியமைத்தல்,

தரவு தளத்தை சுத்தப்படுத்துதல் ஆகிய மேம்பாட்டுப்பணிகள் மூலம் மென்பொருள் சீர் செய்யப்பட்டு செப்டம்பர் 2 முதல் பொதுமக்கள் எந்தவிதமான இன்னலுமின்றி ஆவணப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் துரிதமாக செயல்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்பதிவு தங்கு தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - இது யாருக்கான ஸ்கெட்ச்?

சென்னை: பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக துறையின் சார்பாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருளில் கீழ்க்கண்ட புதிய அலகுகள் உருவாக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

1. ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் கண்டு, ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தவிர்த்தல்.

2. வில்லங்கச்சான்றில் திருத்தம் மேற்கொள்ள இணையவழி விண்ணப்பித்தல்.

3. கிறிஸ்தவ திருமண வடிப்புகளை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையவழியிலோ விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுதல், ஒருங்கிணைந்த தணிக்கை அலகு, முதியவர்களுக்கு ஆவணப்பதிவில் முன்னுரிமை.

4. ஆவணங்களைப்பதிவு செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு, சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர், முன்பதிவு செய்த அதே வரிசையில் வரிசைக்கிரமமாக, எந்தவிதமான பாகுபாடுமின்றி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5. பொதுவாக பொதுமக்கள் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே பதிவுக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்கின்றனர். மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி, ஒரே சமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கமாக உள்ளது.

அவ்வாறு ஒரே சமயத்தில் அனைத்து அலுவலகங்களிலும் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும்போது நெட்வொர்க்கில் அதிக நெரிசல் ஏற்பட்டு, மென்பொருளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக சொத்து குறித்த வில்லங்க விவரங்களைப் பதிவுத்துறையின் வலைதளத்திலிருந்து இணையவழியாக இலவசமாகப் பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியினைப் பயன்படுத்தி, சில கைப்பேசி செயலிகள் வில்லங்கச் சான்றுகளை தரவிறக்கம்செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இதனால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னையை நிவர்த்தி செய்து மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றன. தன்னிச்சையாக பதிவுத்துறை வலைதளத்தில் டேக் செய்யப்பட்டிருந்த அந்த கைப்பேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் பிரச்னை சீராக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறையின் யு.ஆர்.எல் எனப்படும் இணைய முகவரியினை குறியாக்கம் செய்தல், இரண்டு நொடிகளுக்கு மேல் காலமெடுக்கும் மித வேக தரவு தள வினவுகளை மாற்றியமைத்தல்,

தரவு தளத்தை சுத்தப்படுத்துதல் ஆகிய மேம்பாட்டுப்பணிகள் மூலம் மென்பொருள் சீர் செய்யப்பட்டு செப்டம்பர் 2 முதல் பொதுமக்கள் எந்தவிதமான இன்னலுமின்றி ஆவணப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் துரிதமாக செயல்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்பதிவு தங்கு தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - இது யாருக்கான ஸ்கெட்ச்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.