ETV Bharat / city

சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Nov 13, 2020, 1:12 PM IST

சென்னையில் நாளை மழை
சென்னையில் நாளை மழை


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை பொறுத்தவரை அடுத்த 24 (13.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ,

அடுத்த 48 (14.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ,

அடுத்த 72 (15.11.2020) மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) காரியகோவில் அணை (சேலம்) 9 செ.மீ, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, மகாபலிபுரம், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 6 செ.மீ, எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 5 செ.மீ, பாபநாசம் (திருநெல்வேலி), தம்மம்பட்டி (சேலம்), செங்கல்பட்டு , சீர்காழி (நாகப்பட்டினம்) , செய்யூர் (செங்கல்பட்டு) பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை பொறுத்தவரை அடுத்த 24 (13.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ,

அடுத்த 48 (14.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ,

அடுத்த 72 (15.11.2020) மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) காரியகோவில் அணை (சேலம்) 9 செ.மீ, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, மகாபலிபுரம், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 6 செ.மீ, எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 5 செ.மீ, பாபநாசம் (திருநெல்வேலி), தம்மம்பட்டி (சேலம்), செங்கல்பட்டு , சீர்காழி (நாகப்பட்டினம்) , செய்யூர் (செங்கல்பட்டு) பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.