ETV Bharat / city

பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Feb 22, 2022, 7:20 AM IST

வாக்கு எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்ட நடிகையும், பாஜக வேட்பாளருமான ஜெயலட்சுமி மீது ஐந்து பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி
பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி

சென்னை: அம்பத்தூர் 90வது வார்டில் பாஜக சார்பில் நடிகை ஜெயலட்சுமி, திமுக சார்பில் ராஜகோபால் மற்றும் அதிமுக சார்பில் அய்யனார் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து எந்திரத்தை மாநகராட்சி அலுவலர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, பாஜகவினர் சிலர் மாநகராட்சி அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதை கண்டிக்கும் விதமாக ஜெயலட்சுமி உள்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் சிலர் மீது அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், சிறை வைத்தல், கலகம் செய்ய தூண்டி விடுதல், பொது அமைதியை கெடுக்கும் வகையில் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: அம்பத்தூர் 90வது வார்டில் பாஜக சார்பில் நடிகை ஜெயலட்சுமி, திமுக சார்பில் ராஜகோபால் மற்றும் அதிமுக சார்பில் அய்யனார் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து எந்திரத்தை மாநகராட்சி அலுவலர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, பாஜகவினர் சிலர் மாநகராட்சி அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதை கண்டிக்கும் விதமாக ஜெயலட்சுமி உள்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் சிலர் மீது அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், சிறை வைத்தல், கலகம் செய்ய தூண்டி விடுதல், பொது அமைதியை கெடுக்கும் வகையில் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.