ETV Bharat / city

’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது’

author img

By

Published : Jan 6, 2021, 4:50 PM IST

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தை சீரழித்துள்ளதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் சிபிஐ மூன்று பேரை கைது செய்துள்ள நிகழ்வு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

“அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதை தொடக்கத்திலிருந்தே திமுக வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர்களை காப்பாற்ற முயன்றது அதிமுக அரசு. இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, திருநாவுக்கரசு என்பவரைக் கைது செய்து, அவரை மட்டும் பலிகடாவாக்கி, ஆளுந்தரப்பை காப்பாற்ற எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை.

அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் தொடர்புடைய, ‘பார்‘ நாகராஜன் போன்ற அதிமுக நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை அக்கறை காட்டினர். எடப்பாடியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இந்த லட்சணத்தில்தான் உள்ளது.

முழுக்க முழுக்க அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இந்த பாலியல் கொடூரத்தை மூடி மறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி திசை திருப்பும் வேலையிலும் அதிமுக அரசும், அதன் காவல்துறையும் செயல்பட்டதை திமுக தொடர்ந்து எதிர்த்து போராடி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு, பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை சிபிஐ இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இளம்பெண்களை நம்ப வைத்து, அதன்பிறகு ஏமாற்றி, பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்து, சீரழித்த கொடூரன்களில் மூவர் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர். அதிமுகவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர்.

சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது. பொல்லாத அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சிபிஐ விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அதிமுகவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகர் உள்பட மேலும் மூவர் கைது!

“அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதை தொடக்கத்திலிருந்தே திமுக வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர்களை காப்பாற்ற முயன்றது அதிமுக அரசு. இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, திருநாவுக்கரசு என்பவரைக் கைது செய்து, அவரை மட்டும் பலிகடாவாக்கி, ஆளுந்தரப்பை காப்பாற்ற எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை.

அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் தொடர்புடைய, ‘பார்‘ நாகராஜன் போன்ற அதிமுக நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை அக்கறை காட்டினர். எடப்பாடியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இந்த லட்சணத்தில்தான் உள்ளது.

முழுக்க முழுக்க அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இந்த பாலியல் கொடூரத்தை மூடி மறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி திசை திருப்பும் வேலையிலும் அதிமுக அரசும், அதன் காவல்துறையும் செயல்பட்டதை திமுக தொடர்ந்து எதிர்த்து போராடி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு, பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை சிபிஐ இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இளம்பெண்களை நம்ப வைத்து, அதன்பிறகு ஏமாற்றி, பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்து, சீரழித்த கொடூரன்களில் மூவர் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர். அதிமுகவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர்.

சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது. பொல்லாத அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சிபிஐ விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அதிமுகவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகர் உள்பட மேலும் மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.