ETV Bharat / city

சென்னையில் சோகம்... மகனைக் கொன்றுவிட்டு தாய்- தந்தை தற்கொலை!

author img

By

Published : Feb 5, 2022, 8:25 AM IST

சென்னையில் மகனைக் கொன்றுவிட்டு தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

சென்னை: ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவருக்கு சோபியா என்ற மனைவியும், அப்துல் கலீம் என்ற 14 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மகன் அப்துல் சலீம் பிறவியிலிருந்து வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து உள்ளார். இந்த உடல்நலக் குறைபாட்டைத் தீர்க்க முடியாததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிப்.4ஆம் தேதியான நேற்று காலை முகமது சலீம் தனது சகோதரிக்குக் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதன்பிறகு, தனது வீட்டில் மகனைக் கொன்றுவிட்டு, கணவன், மனைவி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

சலீமின் சகோதரி சலீனா அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டேங்க் பேக்டரி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அழுது புரண்டதால் அதிகம் ஒண்ணு' - திருச்சி காங்கிரஸ் களேபரங்கள்

சென்னை: ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவருக்கு சோபியா என்ற மனைவியும், அப்துல் கலீம் என்ற 14 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மகன் அப்துல் சலீம் பிறவியிலிருந்து வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து உள்ளார். இந்த உடல்நலக் குறைபாட்டைத் தீர்க்க முடியாததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிப்.4ஆம் தேதியான நேற்று காலை முகமது சலீம் தனது சகோதரிக்குக் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதன்பிறகு, தனது வீட்டில் மகனைக் கொன்றுவிட்டு, கணவன், மனைவி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

சலீமின் சகோதரி சலீனா அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டேங்க் பேக்டரி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அழுது புரண்டதால் அதிகம் ஒண்ணு' - திருச்சி காங்கிரஸ் களேபரங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.