ETV Bharat / city

மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Jun 21, 2022, 10:59 PM IST

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகளை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கை, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இலவசங்கள் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இலவசங்கள் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே இலவசமாக பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என 2010 ஆம் ஆண்டு விதிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த விதிகளை ரத்து செய்து, இந்த மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகளை அரசே வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் சடகோபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான் பாட புத்தகங்களையும், சீருடைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறவில்லை, 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளால் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்படவில்லை எனவும், தாளாளர் என்ற அடிப்படையில் தனி நபர் இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், விதிகள் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகள் தாமதமாக வழக்கு தொடர்ந்ததற்கான நியாயமான காரணங்களை மனுவில் விளக்கவில்லை, எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: வணிக வங்கிகளோடு போட்டி போடும் அளவுக்கு வியாபாரத்தை பெருக்கவேண்டும் - கூட்டுறவு வங்கிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே இலவசமாக பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என 2010 ஆம் ஆண்டு விதிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த விதிகளை ரத்து செய்து, இந்த மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகளை அரசே வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் சடகோபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான் பாட புத்தகங்களையும், சீருடைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறவில்லை, 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளால் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்படவில்லை எனவும், தாளாளர் என்ற அடிப்படையில் தனி நபர் இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், விதிகள் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகள் தாமதமாக வழக்கு தொடர்ந்ததற்கான நியாயமான காரணங்களை மனுவில் விளக்கவில்லை, எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: வணிக வங்கிகளோடு போட்டி போடும் அளவுக்கு வியாபாரத்தை பெருக்கவேண்டும் - கூட்டுறவு வங்கிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.