ETV Bharat / city

மின்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்: எஃப்ஐஆர்-ஐ மாற்றிய போலீஸ்! இறந்தவரின் மனைவி புகார்! - fake fir electric pole accident 1 dead

சென்னை: சிட்லபாக்கம் அருகே மின்கம்பம் சாய்ந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் மின்சார வாரியத்திற்கு ஆதரவாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததில் முறைகேடு செய்துள்ளதாக இறந்தவரின் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

Sitlapaakam fake fir
author img

By

Published : Sep 18, 2019, 8:11 AM IST

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் சேதுராஜன் என்பவர் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது அருகிலிருந்த மின்கம்பம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் சம்பவம் இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்த புகார் கடிதத்தில் முக்கியமான ஏழு வரிகளை காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யாமல் மாற்றம் செய்து பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக அவர் எழுதிய புகார் கடிதத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் போதிய பராமரிப்பின்மையே காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மாறாக காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அந்த முக்கியமான வரிகளை பதிவு செய்யாமல் அதற்குப் பதிலாக மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தினால் சேதுராஜன் உயிரிழந்தார் எனப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் மனைவி கூறியிருந்தார்.

இந்தச் செயல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கை காவல் துறையுடன் சேர்ந்து மறைக்கும் விதமாகவே உள்ளது என்று அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதனை மாற்றக்கோரி அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் சேதுராஜன் என்பவர் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது அருகிலிருந்த மின்கம்பம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் சம்பவம் இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்த புகார் கடிதத்தில் முக்கியமான ஏழு வரிகளை காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யாமல் மாற்றம் செய்து பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக அவர் எழுதிய புகார் கடிதத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் போதிய பராமரிப்பின்மையே காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மாறாக காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அந்த முக்கியமான வரிகளை பதிவு செய்யாமல் அதற்குப் பதிலாக மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தினால் சேதுராஜன் உயிரிழந்தார் எனப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் மனைவி கூறியிருந்தார்.

இந்தச் செயல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கை காவல் துறையுடன் சேர்ந்து மறைக்கும் விதமாகவே உள்ளது என்று அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதனை மாற்றக்கோரி அவர் வலியுறுத்தியுள்ளார்.

Intro:Body:சிட்லபாக்கம் மின்கம்பம் முறிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான வழக்கில் மின்சார வாரியத்திற்கு ஆதரவாக முதல் தகவல் அறிக்கையை தயார் செய்த போலீசார்.*

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்டலபாக்கம் மின் கம்பம் முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் சேதுராஜன் என்பவர் மரணமடைந்தார். மேலும் தெரு நாய்களுக்கு உணவு கொடுக்கச் சென்ற பொழுது அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து அவர் மீது மின்கம்பி பட்டதும் காரணமாகவே அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவி சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்த புகார் கடிதத்தில் முக்கியமான 7 வரிகளை காவல்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யாமல் மாற்றம் செய்து பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக அவர் எழுதிய புகார் கடிதத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தற்கு மின்சார வாரியத்தின் போதிய பராமரிப்பின்மை காரணமாகவே அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மாறாக காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அந்த முக்கியமான வரிகளை நீக்கி விட்டு அதற்கு பதிலாக மின்கம்பி அறுந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் பதிவிட்டுள்ளனர்.

இந்த செயல் தமிழக மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கை காவல் துறையுடன் சேர்ந்து மறைக்கும் விதமாகவே உள்ளது. போதிய பராமரிப்பு மற்றும் கவனக்குறைவு காரணமாகவே மின் விபத்துகள் அதிக அளவில் நிகழ்ந்து வருவது குறிப்பித்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.