ETV Bharat / city

ஸ்டாலினுக்கு இனி விளம்பரம் தேவையில்லை - கனிமொழி

author img

By

Published : Aug 13, 2019, 2:25 PM IST

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிமேலும் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

mk stalin

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி பேசுகையில், 'தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த தலைவர் ஸ்டாலின் என்பதால் அவருக்கு இனிமேலும் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை என்பதாலேயே ஸ்டாலின் அங்கு சென்றார். இனியாவது மக்களுக்கு உரிய உதவி அளிக்க வேண்டும்' என்று கூறினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி

தொடர்ந்து பேசிய கனிமொழி, 'நீலகிரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஏன் இன்னும் பார்வையிடவில்லை என்பதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு இருக்கிறது. பாஜகவின் ஒரு கையாக செயல்பட்டுவரும் அதிமுக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஆதரித்து பேசுபவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி பேசுகையில், 'தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த தலைவர் ஸ்டாலின் என்பதால் அவருக்கு இனிமேலும் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை என்பதாலேயே ஸ்டாலின் அங்கு சென்றார். இனியாவது மக்களுக்கு உரிய உதவி அளிக்க வேண்டும்' என்று கூறினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி

தொடர்ந்து பேசிய கனிமொழி, 'நீலகிரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஏன் இன்னும் பார்வையிடவில்லை என்பதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு இருக்கிறது. பாஜகவின் ஒரு கையாக செயல்பட்டுவரும் அதிமுக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஆதரித்து பேசுபவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Intro:திமுக எம்பி கனிமொழி சென்னை விமானநிலையத்தில் பேட்டிBody:தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய மக்களவை உறுப்பினர்
கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

ஸ்டாலின் அவர்களுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை தமிழகம் மக்கள் எல்லோரும் அறிந்த தலைவர் அவர் எனவே இனிமேல் அவருக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

முதல்வர் ஏன் இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை அவரை யார் தடுத்தது அதை அவர் செய்திருக்கலாமே. இதற்கான பதிலை முதல்வர் அளிக்க வேண்டும் .

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் அவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் .

ஏற்கனவே கஜா புயலால் பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு நிதி முழுமையாக கிடைக்காத நிலையில் திமுக மத்திய அரசிடம் நிதி ஒதுக்க வலியுறுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்.

மத்திய அரசு தர வேண்டிய நிதியை பெற
திமுக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் இருக்கிறது.
பா.ஜ.க வின் ஒரு கையாக செயல்பட்டு கொண்டிருக்கிற அதிமுக , தமிழகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற இந்த சூழலிலாவது மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய போதிய நிதியை கேட்டு பெற வேண்டும்

தமிழகமும் நாளை பிரிக்கப்பட்டால் அதிமுக மௌனமாக தான் இருக்கும் என்ற பா.சிதம்பரத்தின் கருத்துக்கு பதிலளித்த முதல்வர் அவரால் ஒரு பயனும் இல்லை பூமிக்கு பாரம் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்

முதல்வரின் கீழ்த்தரமான முறையில் பேசிவருவதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு 144 போடப்பட்டு இருக்கிறது. எனவே இதை ஆதரித்து பேசுபவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் அந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.