ETV Bharat / city

இரு மாவட்டங்களின் ஊரகப் பகுதி சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு!

author img

By

Published : Nov 13, 2019, 4:30 PM IST

சென்னை: விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள ஊரகப் பகுதி சாலைகளை நபார்டு வங்கியின் உதவியுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Allocation of funds to improve the roads of the two districts

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதி சாலைகள் நபார்டு வங்கி உதவியுடன் மேம்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 35 சாலைகளை மேம்படுத்த முடிவுசெய்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 58.969 கி.மீ. தூரம் கொண்ட 20 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 40.31 கோடி ரூபாய், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 26.185 கி.மீ. நீளம் கொண்ட 15 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 20.56 கோடி ரூபாய் என மொத்தம் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து 85 கி.மீ. நீளமுள்ள சாலை மேம்பாட்டுக்கு 60.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதி சாலைகள் நபார்டு வங்கி உதவியுடன் மேம்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 35 சாலைகளை மேம்படுத்த முடிவுசெய்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 58.969 கி.மீ. தூரம் கொண்ட 20 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 40.31 கோடி ரூபாய், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 26.185 கி.மீ. நீளம் கொண்ட 15 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 20.56 கோடி ரூபாய் என மொத்தம் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து 85 கி.மீ. நீளமுள்ள சாலை மேம்பாட்டுக்கு 60.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2018 பெருவெள்ளத்துக்குப் பிறகு 147 சுரங்கங்களுக்கு அரசு அனுமதி!

Intro:Body:விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதி சாலைகளை நபார்டு வங்கியின் உதவியுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊரக பகுதி சாலைகள் நபார்டு வங்கி உதவியுடன் மேம்படுத்த படுகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 35 சாலைகளை மேம்படுத்த முடிவு செய்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 58.969 கி. மீ. தூரம் கொண்ட 20 பஞ்சாயத்து சாலைகளை மேம்படுத்த 40.31 கோடி ரூபாயும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 26.185 கிமீ. நீளம் கொண்ட 15 சாலைகளை மேம்படுத்த 20.56 கோடி என மொத்தம் இரண்டு மாவட்டங்களும் சேர்த்து 85 கிமீ. நீளமுள்ள சாலை மேம்பாட்டுக்கு 60.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.