ETV Bharat / business

கரோனா பாதிப்பை சமாளிக்கும் வகையில் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்!

author img

By

Published : Apr 8, 2020, 11:57 AM IST

டெல்லி: கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என 300க்கும் மேற்பட்ட பொருளாதார அறிஞர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

hike in payout to vulnerable  Over 300 economists seek hike in payout to vulnerable  social scientists seek 4-fold hike in payout to vulnerable  Coronavirus in India  business news  கரோனா பாதிப்பு  கரோனா நிவாரணம் ரூ.6 ஆயிரம்  பிரதமருக்கு பொருளாதார அறிஞர்கள் கோரிக்கை  இந்தியாவில் கோவிட்19 பாதிப்பு
hike in payout to vulnerable Over 300 economists seek hike in payout to vulnerable social scientists seek 4-fold hike in payout to vulnerable Coronavirus in India business news கரோனா பாதிப்பு கரோனா நிவாரணம் ரூ.6 ஆயிரம் பிரதமருக்கு பொருளாதார அறிஞர்கள் கோரிக்கை இந்தியாவில் கோவிட்19 பாதிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட 21 நாள் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 300 க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் ஆகியோர், கோவிட் -19 முழு அடைப்பால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும் வகையில் தங்களுடைய மாதாந்திர உணவு ஆதரவை ஒவ்வொரு குடும்பத்திற்கு குறைந்தது ஆறு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்களை வலியுறுத்தியுள்ளனர்.

அதில், “குடும்பத்தின் ஒவ்வொரு பெண் உறுப்பினருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் குறைந்தப்பட்ச மத்திய மற்றும் மாநில பங்களிப்பை மாதத்திற்கு குறைந்தது ஆறு ஆயிரமாக ஆக உயர்த்த வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 கிலோ இலவச ரேஷன் அரிசி, முழு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு தற்போதைய குறுகிய கால நிவாரண தொகுப்பை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.

முறைசாரா பொருளாதாரத்தில் ஏழைகளின் அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மிகவும் துயரமடைந்தவர்களுக்கு உணவு மூலம் மாதத்திற்கு ஒரு நபருக்கு 10 கிலோ தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட 21 நாள் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 300 க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் ஆகியோர், கோவிட் -19 முழு அடைப்பால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும் வகையில் தங்களுடைய மாதாந்திர உணவு ஆதரவை ஒவ்வொரு குடும்பத்திற்கு குறைந்தது ஆறு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்களை வலியுறுத்தியுள்ளனர்.

அதில், “குடும்பத்தின் ஒவ்வொரு பெண் உறுப்பினருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் குறைந்தப்பட்ச மத்திய மற்றும் மாநில பங்களிப்பை மாதத்திற்கு குறைந்தது ஆறு ஆயிரமாக ஆக உயர்த்த வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 கிலோ இலவச ரேஷன் அரிசி, முழு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு தற்போதைய குறுகிய கால நிவாரண தொகுப்பை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.

முறைசாரா பொருளாதாரத்தில் ஏழைகளின் அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மிகவும் துயரமடைந்தவர்களுக்கு உணவு மூலம் மாதத்திற்கு ஒரு நபருக்கு 10 கிலோ தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.