ETV Bharat / briefs

ஈரோட்டில் மேலும் இருவருக்கு கரோனா!

author img

By

Published : Jun 9, 2020, 1:56 AM IST

ஈரோட்டில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

erode corona ward
erode corona ward

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கடந்த 50 நாள்களுக்கு மேலாக நோய்த்தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில்,தற்போது மாவட்டத்தில் இருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயம்புத்தூர் செவிலி பயிற்சிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரிலிருந்து திருப்பூருக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று கோயம்புத்தூர் திரும்பினார். இவருக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு கோயம்புத்தூர் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் செங்கல்பட்டிலுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கடந்த 50 நாள்களுக்கு மேலாக நோய்த்தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில்,தற்போது மாவட்டத்தில் இருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயம்புத்தூர் செவிலி பயிற்சிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரிலிருந்து திருப்பூருக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று கோயம்புத்தூர் திரும்பினார். இவருக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு கோயம்புத்தூர் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் செங்கல்பட்டிலுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.