ETV Bharat / briefs

சாம் கரன் அதிரடியால் பஞ்சாப் அணி 183 ரன்கள் குவிப்பு

author img

By

Published : May 4, 2019, 1:35 AM IST

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் ணி, சாம் கரனின் அதிரடியால் 183 ரன்கள் குவித்தது.

சாம் கரன் அதிரடியில் பஞ்சாப் அணி 183 ரன்கள் குவிப்பு

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஆல்ரவுண்டர் சாம் கரனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது

24 பந்துகளை எதிர்கொண்ட சாம் கரன் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் சந்தீப் வாரியர் இரண்டு, ஹெரி கர்னி, ரஸல், நிதிஷ் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஆல்ரவுண்டர் சாம் கரனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது

24 பந்துகளை எதிர்கொண்ட சாம் கரன் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் சந்தீப் வாரியர் இரண்டு, ஹெரி கர்னி, ரஸல், நிதிஷ் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.