டெல்லியின் சிஆர் பூங்கா சாலையில் நேற்று (ஜூன் 8) இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். அப்போது அவர்களை பணியிலிருந்து போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாததற்கும், மூன்று பேர் பயணம் செய்ததற்கும், அதோடு ஒன் வேயில் சென்றதற்கும் அபராத சலான் வழங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போன் செய்து மூன்று பேரை வரவழைத்து ஆர்வாளரை சரமாகிய தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி போலீசார் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேரை கைது செய்தனர். இதனிடையே இரண்டு பெண்களில் ஒருவர் ஆய்வாளரே முதலில் தனது கன்னத்தில் அறைந்ததாகவும், அதனாலேயே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: பப்ஜி விளையாட்டால் விபரீதம்... தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன்...