ETV Bharat / bharat

விடைபெற்றார் பாடகர் சித்து மூஸ்வாலா

author img

By

Published : May 31, 2022, 10:32 PM IST

பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் நிர்வாகியுமான சித்து மூஸ்வாலாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

விடைபெற்றார் 28 வயது பாடகர் சித்து மூஸ்வாலா
விடைபெற்றார் 28 வயது பாடகர் சித்து மூஸ்வாலா

மான்சா (பஞ்சாப்): பஞ்சாபி மொழி பாடகரும், காங்கிரஸ் நிர்வாகியுமான சித்து மூஸ்வாலாவின் உடல் பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான மூசாவில் இன்று (மே 31) தகனம் செய்யப்பட்டது.

28 வயதான சித்து மூஸ்வாலா கடந்த மே 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இன்று காலை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவரது உடல் மூசா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகர் எனப் பல இடங்களில் இருந்து உறவினர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து சித்து மூஸ்வாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று மதியம் அவரது உடல் அவரது விருப்பமான டிராக்டரில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் அவரது ரசிகர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

சித்து மூஸ்வாலாவின் உடல் அவரது சொந்த கிராமமான மூசாவில் இன்று தகனம் செய்யப்பட்டது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சித்து மூஸ்வாலா மரணம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

மான்சா (பஞ்சாப்): பஞ்சாபி மொழி பாடகரும், காங்கிரஸ் நிர்வாகியுமான சித்து மூஸ்வாலாவின் உடல் பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான மூசாவில் இன்று (மே 31) தகனம் செய்யப்பட்டது.

28 வயதான சித்து மூஸ்வாலா கடந்த மே 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இன்று காலை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவரது உடல் மூசா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகர் எனப் பல இடங்களில் இருந்து உறவினர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து சித்து மூஸ்வாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று மதியம் அவரது உடல் அவரது விருப்பமான டிராக்டரில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் அவரது ரசிகர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

சித்து மூஸ்வாலாவின் உடல் அவரது சொந்த கிராமமான மூசாவில் இன்று தகனம் செய்யப்பட்டது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சித்து மூஸ்வாலா மரணம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.