அசாம் : சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனித குழந்தையை போல குட்டியை ஈன்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஆடு வளர்ப்பவர் கூறும்போது, "ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்தது.
![மனித உருவில் ஆட்டுக்குட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14039142_dd.png)
வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால், இல்லை, உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல இருந்தது. ஆனால் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன. இந்த ஆட்டுககுட்டி பிறந்து சில நிமிடங்களில் இறந்தவிட்டது”என்றார்.