ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் பாஜக - காங்கிரசுக்கு ஆட்டம் காட்டிய ஆதிவாசி கட்சி! அப்படி என்ன நடந்தது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:34 PM IST

2023 Madhya Pradesh Election Result: மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சைலானா தொகுதியில் பாரத ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

dodiyar-from-bharat-adivasi-party-registers-victory-amid-bjp-wave-in-mp-assembly-polls
மத்திய பிரதேசம்: சைலானாவில் பாஜக காங்கிரஸைத் தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்த பாரத் ஆதிவாசி கட்சி

போபால் (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி 230 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணியானது நேற்று (டிசம்பர். 3) நடைபெற்றது. இதில், 163 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் 66 தொகுதியிலும் பாரத் ஆதிவாசி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், பாரத் ஆதிவாசி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் சைலானா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் (வயது 33) போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்ப்பில் மூத்த தலைவர் ஹர்ஷ் விஜய் கெலாட் மற்றும் பாஜக சார்பாக சங்கீதா சரேல் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று (டிசம்பர் 3) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் 71,219 வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹர்ஷ் விஜய் கெலாட் 66,601 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து கமலேஷ்வர் தோடியார் 4,648 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பாஜக மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கமலேஷ்வர் தோடியார்? மத்திய பிரதேசம் போபால் பகுதியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் வசிக்கும் வீட்டில் மழைக் காலங்களில் தார்ப்பாய் போட்டு மூடும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இவரது தாயார் சீதாபாய் தனது மகன் வெற்றி பெற்றதை அறியாத நிலையில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் கமலேஷ்வர் தோடியார் வெற்றியை அறிந்த குடும்பத்தினர், கமலேஷ்வர் ஏழை மக்களுக்காக பணியாற்றுவார் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் கமலேஷ்வர் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். கமலேஷ்வர் தோடியார் தனது பள்ளிப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பை ரத்லமிலுள்ள சைலானாவில் முடித்தார்.

நான்கு வருடம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டாவில் கூலி வேலை செய்துள்ளார். அதன் பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி (SP), பகுஜன் சமாஜ் கட்சி (BSP), ஆம் ஆத்மி கட்சி (AAP) போன்ற பெரிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் பாரத் ஆதிவாசி கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து இருப்பது வியக்கத்தக்க வகையில் அமைந்து உள்ளது.

இதையும் படிங்க: மிசோரமில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சோரம் மக்கள் இயக்கம்!

போபால் (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி 230 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணியானது நேற்று (டிசம்பர். 3) நடைபெற்றது. இதில், 163 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் 66 தொகுதியிலும் பாரத் ஆதிவாசி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், பாரத் ஆதிவாசி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் சைலானா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் (வயது 33) போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்ப்பில் மூத்த தலைவர் ஹர்ஷ் விஜய் கெலாட் மற்றும் பாஜக சார்பாக சங்கீதா சரேல் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று (டிசம்பர் 3) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்த கமலேஷ்வர் தோடியார் 71,219 வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹர்ஷ் விஜய் கெலாட் 66,601 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து கமலேஷ்வர் தோடியார் 4,648 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பாஜக மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கமலேஷ்வர் தோடியார்? மத்திய பிரதேசம் போபால் பகுதியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் வசிக்கும் வீட்டில் மழைக் காலங்களில் தார்ப்பாய் போட்டு மூடும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இவரது தாயார் சீதாபாய் தனது மகன் வெற்றி பெற்றதை அறியாத நிலையில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் கமலேஷ்வர் தோடியார் வெற்றியை அறிந்த குடும்பத்தினர், கமலேஷ்வர் ஏழை மக்களுக்காக பணியாற்றுவார் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் கமலேஷ்வர் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். கமலேஷ்வர் தோடியார் தனது பள்ளிப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பை ரத்லமிலுள்ள சைலானாவில் முடித்தார்.

நான்கு வருடம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டாவில் கூலி வேலை செய்துள்ளார். அதன் பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி (SP), பகுஜன் சமாஜ் கட்சி (BSP), ஆம் ஆத்மி கட்சி (AAP) போன்ற பெரிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் பாரத் ஆதிவாசி கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து இருப்பது வியக்கத்தக்க வகையில் அமைந்து உள்ளது.

இதையும் படிங்க: மிசோரமில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சோரம் மக்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.