ETV Bharat / bharat

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

author img

By

Published : Jun 30, 2021, 4:27 PM IST

புதுச்சேரி அரசு ஜூலை 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை, பூங்கா இரவு 9 மணிவரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

curfew extend at puducherry
curfew extend at puducherry

புதுச்சேரி: கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய (ஜூன் 30) உள்ள நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை முதல் தளர்வுகளின் விவரங்கள்

அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி

ஆனால் திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் நிறுவனங்கள் திறக்கப்படாது.

அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை 100 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்படலாம். 100 சதவீதம் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு பணிசெய்ய அனுமதி

திருமணங்கள் 100 நபர்களை கொண்டு நடத்திக்கொள்ளலாம். அனைத்து மதுபான கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம். சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கான பட்டப்பிடிப்பை 100 பேரை கொண்டு நடத்த அனுமதி.

கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் 9 மணிவரை மட்டுமே இருந்தது. தற்போது இரவு 9 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் இதே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள திறக்கப்படுகிறது.

உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி.

அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க அனுமதி.

இவ்வாறு புதுச்சேரி அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி: கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய (ஜூன் 30) உள்ள நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை முதல் தளர்வுகளின் விவரங்கள்

அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி

ஆனால் திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் நிறுவனங்கள் திறக்கப்படாது.

அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை 100 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்படலாம். 100 சதவீதம் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு பணிசெய்ய அனுமதி

திருமணங்கள் 100 நபர்களை கொண்டு நடத்திக்கொள்ளலாம். அனைத்து மதுபான கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம். சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கான பட்டப்பிடிப்பை 100 பேரை கொண்டு நடத்த அனுமதி.

கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் 9 மணிவரை மட்டுமே இருந்தது. தற்போது இரவு 9 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் இதே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள திறக்கப்படுகிறது.

உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி.

அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க அனுமதி.

இவ்வாறு புதுச்சேரி அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.